திருவள்ளூர்: தமிழ்நாட்டில் மக்களைத் தேடி மருத்துவ திட்டம் தொடங்கி நடைமுறையில் உள்ள நிலையில், தொழிலாளர்களின் உடல்நிலையை பாதுகாக்கும் வகையில், தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டத்தை நேற்று (ஜன.9) திருவள்ளூர் மாவட்டம், தொடுகாடு கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், சேலம், திருச்சி, ராணிப்பேட்டை, திண்டுக்கல், மதுரை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மருத்துவ மண்டலங்கள் உள்ளடக்கிய 711 தொழிற்சாலைகளில் பணியாற்றும் 8 லட்சத்து 53 ஆயிரத்து 90 தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக "தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டம்" தொடங்கப்பட்டுள்ளது.
-
தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம்” திருவள்ளூர் Hyundai Mobis கம்பெனியில் தொடங்கி வைக்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN pic.twitter.com/CZvFEdw5Z6
— Subramanian.Ma (@Subramanian_ma) January 9, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம்” திருவள்ளூர் Hyundai Mobis கம்பெனியில் தொடங்கி வைக்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN pic.twitter.com/CZvFEdw5Z6
— Subramanian.Ma (@Subramanian_ma) January 9, 2024தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம்” திருவள்ளூர் Hyundai Mobis கம்பெனியில் தொடங்கி வைக்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN pic.twitter.com/CZvFEdw5Z6
— Subramanian.Ma (@Subramanian_ma) January 9, 2024
இத்திட்டத்தின் மூலம் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றா நோய் பரிசோதனையானது தொழிலாளர்களுக்கு செய்யப்படவுள்ளது. இதில், ஒரு மாதத்தில் 8 லட்சம் தொழிலாளருக்கு இத்தகைய பரிசோதனையானது மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.