ETV Bharat / state

விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு இழப்பீடு!

author img

By

Published : Dec 6, 2019, 4:49 PM IST

திருவள்ளூர்: கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பறக்கும் வாகனத்தில் சென்று விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதியுதவியை வங்கியின் மூலமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெற்றுத் தந்தார்.

விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு இழப்பீடு
விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு இழப்பீடு

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் கோவிந்தசாமி. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது பறக்கும் படை காவலராக காவல் துறை வாகனத்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது புதுவாயல் அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .

இது குறித்து அப்போதைய காவல் கண்காணிப்பாளர் பொன்னி, மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் காவல் துறையினரின் குடும்பத்தாரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது, கோவிந்தசாமி ஊத்து கோட்டையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில், காவலர்களின் சேலரி பேக்கேஜ் திட்டத்தில் இணைந்திருந்தது தெரியவந்தது.

உயிரிழந்த காவலரின் மகள் பேட்டி

பின்னர் இது குறித்து, உரிய முறையில் வங்கி மேலாளர் சரிதாதேவிக்கு தகவல் தெரிவித்து, அவரது குடும்பத்தாருக்கு இழப்பீடு தொகையாக ரூபாய் 30 லட்சம் பணத்தை கோவிந்தசாமி மனைவியின் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கோரியுள்ளார்.

மேலும் இறந்த காவலர் கோவிந்தசாமி மனைவி லீலாவதிக்குக்கும் அவரது குடும்பத்தாருக்கும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். உயிரிழந்த கோவிந்தசாமியின் மகள் செய்தியாளரிடம் தெரிவிக்கையில் 30 லட்சம் ரூபாய் கொடுத்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கும்; அதை வாங்கி கொடுத்த காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கும் அரசுக்கும் நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசியல் பிரமுகரை அடித்து உதைத்த காவல் உதவி ஆய்வாளர்

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் கோவிந்தசாமி. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது பறக்கும் படை காவலராக காவல் துறை வாகனத்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது புதுவாயல் அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .

இது குறித்து அப்போதைய காவல் கண்காணிப்பாளர் பொன்னி, மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் காவல் துறையினரின் குடும்பத்தாரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது, கோவிந்தசாமி ஊத்து கோட்டையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில், காவலர்களின் சேலரி பேக்கேஜ் திட்டத்தில் இணைந்திருந்தது தெரியவந்தது.

உயிரிழந்த காவலரின் மகள் பேட்டி

பின்னர் இது குறித்து, உரிய முறையில் வங்கி மேலாளர் சரிதாதேவிக்கு தகவல் தெரிவித்து, அவரது குடும்பத்தாருக்கு இழப்பீடு தொகையாக ரூபாய் 30 லட்சம் பணத்தை கோவிந்தசாமி மனைவியின் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கோரியுள்ளார்.

மேலும் இறந்த காவலர் கோவிந்தசாமி மனைவி லீலாவதிக்குக்கும் அவரது குடும்பத்தாருக்கும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். உயிரிழந்த கோவிந்தசாமியின் மகள் செய்தியாளரிடம் தெரிவிக்கையில் 30 லட்சம் ரூபாய் கொடுத்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கும்; அதை வாங்கி கொடுத்த காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கும் அரசுக்கும் நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசியல் பிரமுகரை அடித்து உதைத்த காவல் உதவி ஆய்வாளர்

Intro:திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பறக்கும் வாகனத்தில் சென்று விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 30 லட்ச ரூபாயை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் மூலமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அவர்கள் வழங்கினார்


Body:திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பறக்கும் வாகனத்தில் சென்று விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 30 லட்ச ரூபாயை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் மூலமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அவர்கள் வழங்கினார்


திருவள்ளூர் மாவட்டத்தில் வெங்கல் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் கோவிந்தசாமி கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி பாராளுமன்ற தேர்தலின்போது தேர்தல் பறக்கும் படை காவலராக காவல்துறை வாகனத்தில் பயணம் மேற்கொண்டபோது புதுவாயல் அருகே அதிகாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் இதில் படுகாயமடைந்த கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .


இது குறித்து அப்போதைய காவல் கண்காணிப்பாளர் பொன்னி அவர்களிடமும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் நேரில் விசாரணை செய்தனர் ஊத்து கோட்டையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் கோவிந்தசாமி காவலர்களின் சேலரி பேக்கேஜ் திட்டத்தில் காவலர் கோவிந்தசாமி இணைந்து இருந்ததால் அவர் இறந்ததும்.

அதை குறித்து உரிய முறையில் வங்கி மேலாளராக இருந்த சரிதாதேவிக்கு தகவல் தெரிவித்து. அவரது குடும்பத்தாருக்கு இழப்பீடு தொகையாக ரூபாய் 30 லட்சம் பணத்தை இறந்துபோன காவலர் கோவிந்தசாமி மனைவி வங்கி கணக்கில் செலுத்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அவர்கள் மூலமாக ஊத்துக்கோட்டை வங்கி மேலாளர் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் இறந்த காவலர் கோவிந்தசாமி மனைவி லீலாவதிக்கு அவரது குடும்பத்தாருக்கும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

உயிரிழந்த கோவிந்தசாமியின் மகள் செய்தியாளரிடம் தெரிவிக்கையில் 30 லட்சம் ரூபாய் கொடுத்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கும் அதை வாங்கி கொடுத்த காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அவர்களுக்கும் அரசுக்கும் நன்றி தெரிவித்தார்.

பேட்டி
மகள் லாவண்யா


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.