ETV Bharat / state

பொது முடக்கத்தின் போது வாகனங்கள் பயன்படுத்தக்கூடாது

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ள பொதுமுடக்கத்தின் போது வாகனங்களை பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் எச்சரித்துள்ளார்.

திருவள்ளூர்  திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனர்  பொது முடக்கம்  thiruvallur  thiruvallur police commissioner  பொது முடக்கத்தில் வாகனங்கள் பயன்படுத்தினால் பறிமுதல்  vehicle seized in thiruvallur  thiruvallur commissioner aravindhan  thiruvallur sp aravindhan
திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன்
author img

By

Published : Jun 20, 2020, 9:50 PM IST

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 12 நாள் பொது முடக்கத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த பொது முடக்கம் குறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், "கடந்த முறை அரசு அறிவித்த பொது முடக்கத்திற்கு திருவள்ளூர் மாவட்ட மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். ஆனால், வாகனப் பயன்பாடு அதிக அளவில் இருந்தன.

எனவே, இந்த ஊரடங்கின்போது, மக்கள் தங்கள் அத்தியவாசியத் தேவைகளுக்கு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், இரண்டு கி.மீக்குள் உள்ள கடைகளில் மக்கள் தங்களுக்கு வேண்டிய அத்தியவாசியப் பொருள்களைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் பேட்டி

சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து இ-பாஸ் இல்லாமல் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்தவர்கள் மீது 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 23 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மதுபானக் கடைகளுக்கு மதுபானப் பிரியர்கள் நடந்து மட்டுமே வர வேண்டும் என்றும் வாகனங்களில் வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மதுபானக் கடைகளில் போதிய அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பொது முடக்கத்தின்போது பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருவள்ளூரில் முழு ஊரடங்கு: பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 12 நாள் பொது முடக்கத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த பொது முடக்கம் குறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், "கடந்த முறை அரசு அறிவித்த பொது முடக்கத்திற்கு திருவள்ளூர் மாவட்ட மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். ஆனால், வாகனப் பயன்பாடு அதிக அளவில் இருந்தன.

எனவே, இந்த ஊரடங்கின்போது, மக்கள் தங்கள் அத்தியவாசியத் தேவைகளுக்கு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், இரண்டு கி.மீக்குள் உள்ள கடைகளில் மக்கள் தங்களுக்கு வேண்டிய அத்தியவாசியப் பொருள்களைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் பேட்டி

சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து இ-பாஸ் இல்லாமல் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்தவர்கள் மீது 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 23 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மதுபானக் கடைகளுக்கு மதுபானப் பிரியர்கள் நடந்து மட்டுமே வர வேண்டும் என்றும் வாகனங்களில் வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மதுபானக் கடைகளில் போதிய அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பொது முடக்கத்தின்போது பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருவள்ளூரில் முழு ஊரடங்கு: பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.