ETV Bharat / state

அதிமுக ஒன்றியக் கவுன்சிலரை கொலை செய்ய முயற்சி - 4 பேர் கைது

திருவள்ளூர்: திருவாலங்காடு அருகே அதிமுக ஒன்றியக் கவுன்சிலரை கொலை செய்யவந்த நான்கு பேரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

author img

By

Published : Jan 13, 2020, 1:29 PM IST

அதிமுக ஒன்றிய கவுன்சிலரை கொலை செய்ய முயற்சி
அதிமுக ஒன்றிய கவுன்சிலரை கொலை செய்ய முயற்சி


திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் குப்பம் கண்டிகை ஆற்றங்கரையில் இன்று காலை நான்கு பேர் கொண்ட கும்பல், கஞ்சா போதையில் கையில் கத்தியுடன் இருந்துள்ளனர். இதைக்கண்ட பொதுமக்கள் அவர்களிடம் விசாரித்தபோது நான்கு பேரும் முன்னுக்குப்பின் முரணாக போதையில் உளறினர்.

இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவர்களை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் திருவாலங்காடு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து காவல் துறையினர் போதையில் கத்தியுடன் இருந்த நான்கு பேரை பிடித்துச்சென்றனர்.

அதிமுக ஒன்றிய கவுன்சிலரை கொலை செய்ய முயற்சி

முதல் கட்ட விசாரணையில் பிடிபட்ட நான்கு பேரும், திருவாலங்காடு ஒன்றியம் குப்பம் கண்டிகை 12ஆவது வார்டு அதிமுக உறுப்பினரான ஜீவா விஜயராகவன் என்பவரை கொலை செய்ய வந்ததாகவும், அதிமுக முன்னாள் அமைச்சர் ரமணா, திருவாலங்காடு அதிமுக ஒன்றிய செயலாளர் சக்திவேல் ஆகியோர் தூண்டுதலின் பேரில் கொலை செய்ய முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவாலங்காடு காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதிமுக ஒன்றியக் கவுன்சிலரை கொலை செய்ய வந்த கும்பலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: களியக்காவிளை எஸ்.ஐ. கொலையில் துப்பு துலங்கியது!


திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் குப்பம் கண்டிகை ஆற்றங்கரையில் இன்று காலை நான்கு பேர் கொண்ட கும்பல், கஞ்சா போதையில் கையில் கத்தியுடன் இருந்துள்ளனர். இதைக்கண்ட பொதுமக்கள் அவர்களிடம் விசாரித்தபோது நான்கு பேரும் முன்னுக்குப்பின் முரணாக போதையில் உளறினர்.

இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவர்களை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் திருவாலங்காடு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து காவல் துறையினர் போதையில் கத்தியுடன் இருந்த நான்கு பேரை பிடித்துச்சென்றனர்.

அதிமுக ஒன்றிய கவுன்சிலரை கொலை செய்ய முயற்சி

முதல் கட்ட விசாரணையில் பிடிபட்ட நான்கு பேரும், திருவாலங்காடு ஒன்றியம் குப்பம் கண்டிகை 12ஆவது வார்டு அதிமுக உறுப்பினரான ஜீவா விஜயராகவன் என்பவரை கொலை செய்ய வந்ததாகவும், அதிமுக முன்னாள் அமைச்சர் ரமணா, திருவாலங்காடு அதிமுக ஒன்றிய செயலாளர் சக்திவேல் ஆகியோர் தூண்டுதலின் பேரில் கொலை செய்ய முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவாலங்காடு காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதிமுக ஒன்றியக் கவுன்சிலரை கொலை செய்ய வந்த கும்பலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: களியக்காவிளை எஸ்.ஐ. கொலையில் துப்பு துலங்கியது!

Intro:
திருவலாங்காடு அருகே ஆற்றில் கத்தியுடன் சுற்றித் திரிந்த 4 பேரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து திருவாலங்காடு காவல்நிலையத்தில் ஒப்படைப்பு அதிமுக ஒன்றிய கவுன்சிலரை கொலை செய்ய வந்ததாக தெரிவித்ததால் பரபரப்பு.



Body:
திருவலாங்காடு அருகே ஆற்றில் கத்தியுடன் சுற்றித் திரிந்த 4 பேரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து திருவாலங்காடு காவல்நிலையத்தில் ஒப்படைப்பு அதிமுக ஒன்றிய கவுன்சிலரை கொலை செய்ய வந்ததாக தெரிவித்ததால் பரபரப்பு.


திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் குப்பம் கண்டிகை ஆற்றங்கரையில் இன்று காலை 4 மர்ம நபர்கள் கஞ்சா போதையில் இருந்தவாறு கையில் கத்தியை வைத்துக்கொண்டு சந்தேகப்படும் படியாக இருந்தனர் இதைக்கண்ட அந்த வழியாக வந்த பொதுமக்கள் அவரிடம் கேட்டபோது மேற்கண்ட நான்கு பேரும் முன்னுக்குப்பின் முரணாக போதையில் உளறினார் இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் மேற்கண்ட நான்கு பேரையும் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து பின்னர் திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதுபோதையில் கத்தியுடன் இருந்த நான்கு நபர்களை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் அப்போது பிடிபட்ட 4 பேரும் திருவாலங்காடு ஒன்றியம் குப்பம் கண்டிகை 12-ஆவது வார்டு அதிமுக உறுப்பினரான ஜீவா விஜயராகவன் என்பவரை கொலை செய்ய வந்ததாகவும் தெரிவித்தனர் மேலும் அவர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் திருவாலங்காடு அதிமுக ஒன்றிய செயலாளர் சக்திவேல் ஆகியோர் தூண்டுதலின் பேரில்தான் 12ஆவது வார்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலரை கொலை செய்ய வந்ததாக தெரிவித்தனர் இதுதொடர்பாக திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட நான்கு நபர்களிடமிருந்து கத்திகளை பறிமுதல் செய்து அவர்களிடம் இது தொடர்பாக மேலும் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அதிமுக ஒன்றிய கவுன்சிலரை கொலை செய்ய முயன்ற சம்பவம் குப்பம் கண்டிகை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது



Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.