திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர் பெருமாள், மாவட்ட துணை கண்காணிப்பாளர் சேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்தப் பேரணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் கலந்துகொண்டு பஜார் வீதியில் மாணவர்கள் பேரணியாக சென்று துண்டறிக்கைகளை விநியோகம் செய்தனர். பின்னர் நகராட்சி அலுவலகத்தில், தீ விபத்து ஏற்பட்டால் எப்படி அணைப்பது, எப்படி தடுத்துக் கொள்வது என்பது பற்றி மாணவர்கள் மத்தியில் தீயணைப்பு துறையினரால் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க:
ஓடும் ரயிலில் செல்போனை பறிக்க முயற்சி - கீழே விழுந்த அப்பாவி இளைஞர் உயிரிழப்பு