திருவள்ளூரை அடுத்த பழைய திருப்பாச்சூரைச் சேர்ந்தவர் குமார்(37). கொத்தனராக வேலை செய்து வருகிறார். இவரது மூன்று பிள்ளைகளையும் திருமணம் செய்து கொடுத்து விட்டு தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மார்ச்.03 அன்று குமார் வழக்கம்போல வீட்டைப்பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த உறவினர், அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு உடனடியாக குமாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 சவரன் தங்க நகையும்,ரொக்கப்பணம் ரூபாய் 10 ஆயிரமும் திருடுபோனது தெரியவந்தது.
பின்னர் இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விமானத்தில் கோளாறு காரணமாக அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்காத அமைச்சர்கள்