ETV Bharat / state

திருவள்ளூர் அருகே விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை

author img

By

Published : Jul 25, 2022, 11:00 AM IST

திருவள்ளூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி விடுதியில் தற்கொலையால் உயிரிழந்தார்.

திருவள்ளூர் அருகே விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை
திருவள்ளூர் அருகே விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை

திருவள்ளூவர் அடுத்த மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழச்சேரி ஊராட்சி அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படிக்கும் திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பூசனம் முருகம்மாள் அவரது மகளான மாணவி சரளா (17) இன்று விடுதியில் இருந்து காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

பின்னர் சக நண்பர்கள் உணவு அருந்த சென்று விட்டனர். அப்போது தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் இந்த பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் சந்திர தாசன், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவி தற்கொலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிசி கல்யாண், திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மாமியார் கொடுமை: 4 மாத கர்ப்பிணி தற்கொலை

திருவள்ளூவர் அடுத்த மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழச்சேரி ஊராட்சி அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படிக்கும் திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பூசனம் முருகம்மாள் அவரது மகளான மாணவி சரளா (17) இன்று விடுதியில் இருந்து காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

பின்னர் சக நண்பர்கள் உணவு அருந்த சென்று விட்டனர். அப்போது தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் இந்த பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் சந்திர தாசன், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவி தற்கொலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிசி கல்யாண், திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மாமியார் கொடுமை: 4 மாத கர்ப்பிணி தற்கொலை

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.