ETV Bharat / state

அரசு கட்டட கல்வெட்டில் ஊராட்சிமன்றத் தலைவரின் பெயர் இடம்பெறாததால் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்! - முதலமைச்சர் விழாவில் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் திறந்து வைத்த கும்மிடிப்பூண்டி சார் பதிவாளர் கட்டட திறப்புவிழா கல்வெட்டில், அந்தப்பகுதி ஊராட்சி மன்றத் தலைவரின் பெயர் இடம் பெறாததைக் கண்டித்து கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Dec 7, 2020, 6:11 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்தி குப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ஜீவா செல்வம்.

இந்தப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றுடி(டிச.7) திறந்து வைக்கிறார்.

இதற்கான துணை விழா அழைப்பிதழ் மற்றும் கட்டட கல்வெட்டில் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் இடம் பெறவில்லை எனக்கூறி, ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு அலுவலர்களின் அலட்சிய போக்கை கண்டித்து கறுப்பு சட்டை அணிந்து, கைகளில் கறுப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

இதனால், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் கே. எஸ் விஜயகுமார் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

இதையும் படிங்க: மத்திய அரசைக் கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்தி குப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ஜீவா செல்வம்.

இந்தப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றுடி(டிச.7) திறந்து வைக்கிறார்.

இதற்கான துணை விழா அழைப்பிதழ் மற்றும் கட்டட கல்வெட்டில் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் இடம் பெறவில்லை எனக்கூறி, ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு அலுவலர்களின் அலட்சிய போக்கை கண்டித்து கறுப்பு சட்டை அணிந்து, கைகளில் கறுப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

இதனால், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் கே. எஸ் விஜயகுமார் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

இதையும் படிங்க: மத்திய அரசைக் கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.