திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டை பேரண்டூர் ஊராட்சியில், ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வருபவர், பாண்டுரங்கன் (50). இவரும், இவரது மனைவியும் கும்மிடிப்பூண்டி அடுத்த நத்தம் கிராமத்தில் வசித்து வரும் தனது மகளின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, புதுவாயல் மேம்பாலம் அருகே சாலையைக் கடக்க முயன்றனர்.
அப்போது பின்புறம் அதிவேகமாக சென்ற ஈச்சர் லாரி மோதி, பாண்டுரங்கன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கவரப்பேட்டை காவல்துறையினர், இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவியின் கண்ணெதிரே கணவன் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவ இடஒதுக்கீடு; விசிக கண்டன ஆர்ப்பாட்டம்!