ETV Bharat / state

ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட ஒரு கிலோ கஞ்சா - இருவர் கைது!

author img

By

Published : Nov 4, 2020, 8:43 PM IST

திருவள்ளூர்: ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், அது தொடர்பாக இருவரை கைது செய்தனர்.

cannabis-seized-and-two-arrested-
cannabis-seized-and-two-arrested-

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி எளாவூர் சோதனைச்சாவடியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கப் பின் முரணாக பதிலளித்தனர்.

அதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், இருசக்கர வானத்தை சோதனையிட்டனர். அந்த சோதனையில், ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா சிக்கியது. அதையடுத்து, கஞ்சாவை வாகனத்துடன் பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரை கைது செய்தனர்.

முதல்கட்ட விசாரணையில், அவர்கள் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த அஜய்குமார்(19), சூர்யா(22) என்பது தெரியவந்தது. தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்பனை செய்து வந்த தாய், மகன் கைது!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி எளாவூர் சோதனைச்சாவடியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கப் பின் முரணாக பதிலளித்தனர்.

அதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், இருசக்கர வானத்தை சோதனையிட்டனர். அந்த சோதனையில், ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா சிக்கியது. அதையடுத்து, கஞ்சாவை வாகனத்துடன் பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரை கைது செய்தனர்.

முதல்கட்ட விசாரணையில், அவர்கள் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த அஜய்குமார்(19), சூர்யா(22) என்பது தெரியவந்தது. தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்பனை செய்து வந்த தாய், மகன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.