ETV Bharat / state

சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் அமல்படுத்த விடமாட்டோம் - ராமச்சந்திரன்

author img

By

Published : Mar 4, 2020, 8:40 AM IST

திருவள்ளூர்: சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி உள்ளிட்ட சட்டங்களை அமல்படுத்த தமிழ்நாட்டில் ஒத்துழைப்பு தரமாட்டோம் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில பொருளாளர் ராமச்சந்திரன் கூறினார்.

protest
protest

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவள்ளூர் நகர கிளை மூலம் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி போன்ற சட்டங்களை எதிர்த்து திருவள்ளூரில் அரசியல் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. சிபிஐஎம் நகர கிளைச்செயலாளர் உதய நிலா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் கீதா, நகர செயலாளர் லோகநாதன், படே மக்கான் மசூதி தலைவர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில பொருளாளர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமச்சந்திரன், சிஏஏ, என்ஆர்சி என்பிஆர் போன்ற சட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதிக்க ஒருபோதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒத்துழைக்காது. தமிழ்நாட்டில் திமுக சார்பில் கையெழுத்து இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் தேசம் காப்போம் மாநாடு, மக்கள் மேடை சார்பில் மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் சிஏஏ-வுக்கு எதிரான தீர்மானம் இயற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.

இதையும் படிங்க: மற்றொரு வகுப்புவாத வன்முறை நாட்டில் நிகழக்கூடாது - ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவள்ளூர் நகர கிளை மூலம் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி போன்ற சட்டங்களை எதிர்த்து திருவள்ளூரில் அரசியல் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. சிபிஐஎம் நகர கிளைச்செயலாளர் உதய நிலா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் கீதா, நகர செயலாளர் லோகநாதன், படே மக்கான் மசூதி தலைவர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில பொருளாளர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமச்சந்திரன், சிஏஏ, என்ஆர்சி என்பிஆர் போன்ற சட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதிக்க ஒருபோதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒத்துழைக்காது. தமிழ்நாட்டில் திமுக சார்பில் கையெழுத்து இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் தேசம் காப்போம் மாநாடு, மக்கள் மேடை சார்பில் மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் சிஏஏ-வுக்கு எதிரான தீர்மானம் இயற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.

இதையும் படிங்க: மற்றொரு வகுப்புவாத வன்முறை நாட்டில் நிகழக்கூடாது - ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.