திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் பல இரும்பு உருக்குத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கடந்த 2006 ஆம் ஆண்டு அங்குள்ள தொழிற்சாலைக்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழைய வெடிகுண்டுகள் திடீரென்று வெடித்ததில் சிறுவன் ஒருவன் படுகாயம் அடைந்தான்.
சம்பவத்தைத் தொடர்ந்து, காவல் துறையினர் இரும்பு உருக்கு ஆலையை ஆய்வு செய்து ராக்கெட் லாஞ்சர், துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து பாதுகாப்பான இடத்தில் வைத்தனர். தற்போது அவற்றை செயலிழக்கச்செய்ய பூனேவிலிருந்து வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் ராணுவ சிறப்பு குழுவினர் வந்துள்ளனர்.
இந்த குழுவினைச் சேர்ந்த ராணுவ சிறப்பு நிபுணர் வேணுகோபால் நாயுடு, கும்மிடிபூண்டி காவல் துணை கண்காணிப்பாளர், காவல் துறையினர் உள்ளிட்டோர் வெடிகுண்டு பொருட்களை செயலிழக்கச் செய்வதற்கான இடத்தினை தேர்வு செய்ய முடிவு செய்து இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், 13 ஆண்டுகளுக்கு மேல் தனியார் தொழிற்சாலையில் வைக்கப்பட்டுள்ள பத்துக்கும் மேற்பட்ட வெடிகுண்டு பொருட்களை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:சோமாலியா: அமெரிக்கா ராணுவ தளத்தில் குண்டுவெடிப்பு!