ETV Bharat / state

ஆண் காவலர்கள் முன்பு இளம்பெண் மானபங்கம்... பெண் ஆய்வாளர் மீது பகீர் குற்றச்சாட்டு! - investigation

திருவள்ளூர்: காவல் ஆய்வாளர் பொற்கொடி என்பவர் ஆண் காவலர்கள் முன்பு இளம்பெண்னை மானபங்கம் செய்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அம்பத்தூர்
author img

By

Published : Jun 20, 2019, 10:53 PM IST

அம்பத்தூர் அருகே 850 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொரட்டூர் ஏரியை ஒட்டியுள்ள முத்தமிழ் நகர், கங்கை நகர், எஸ்.எஸ் நகர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் ஆக்கிரமிப்பு வீடுகளை சென்னை மாவட்ட வருவாய்த் துறையும், பொதுப்பணித்துறை அலுவலர்களும் சேர்ந்து அகற்றினர்.

இதற்கு எதிராக முத்தமிழ் நகர் மக்கள் நீதிமன்றம் சென்று தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுவிட்டதாகக் கூறி, அதே பகுதியில் மீண்டும் விடுகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாபு, வருவாய் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான அலுவலர்கள், அந்த மக்கள் வைத்திருந்த ஆர்டர் செல்லாது எனக் கூறி 25க்கும் மேற்பட்ட வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த மக்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆண் காவலர்கள் முன்பு இளம்பெண் மானபங்கம்

இதையடுத்து, அம்பத்தூர் காவல் ஆய்வாளர் பொற்கொடி தலைமையிலான காவலர்கள் அங்கிருந்த மக்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, குணசேகரன் என்பவரின் மகள் மாலினியின் துப்பட்டாவை ஆண் காவலர்கள் முன்னிலையில் ஆய்வாளர் பொற்கொடி பிடித்து இழுத்து மானபங்கப் படுத்தியதாகவும், இது தொடர்பாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமாரியிடம் மனு அளித்துள்ளனர்.

அம்பத்தூர் அருகே 850 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொரட்டூர் ஏரியை ஒட்டியுள்ள முத்தமிழ் நகர், கங்கை நகர், எஸ்.எஸ் நகர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் ஆக்கிரமிப்பு வீடுகளை சென்னை மாவட்ட வருவாய்த் துறையும், பொதுப்பணித்துறை அலுவலர்களும் சேர்ந்து அகற்றினர்.

இதற்கு எதிராக முத்தமிழ் நகர் மக்கள் நீதிமன்றம் சென்று தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுவிட்டதாகக் கூறி, அதே பகுதியில் மீண்டும் விடுகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாபு, வருவாய் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான அலுவலர்கள், அந்த மக்கள் வைத்திருந்த ஆர்டர் செல்லாது எனக் கூறி 25க்கும் மேற்பட்ட வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த மக்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆண் காவலர்கள் முன்பு இளம்பெண் மானபங்கம்

இதையடுத்து, அம்பத்தூர் காவல் ஆய்வாளர் பொற்கொடி தலைமையிலான காவலர்கள் அங்கிருந்த மக்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, குணசேகரன் என்பவரின் மகள் மாலினியின் துப்பட்டாவை ஆண் காவலர்கள் முன்னிலையில் ஆய்வாளர் பொற்கொடி பிடித்து இழுத்து மானபங்கப் படுத்தியதாகவும், இது தொடர்பாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமாரியிடம் மனு அளித்துள்ளனர்.

Intro:அம்பத்தூர் காவல் ஆய்வாளர் பொற்கொடி ஆண் காவலர்கள் மத்தியில் இளம்பெண்ணை துப்பட்டாவை பிடித்து இழுத்து மான பங்கம் செய்ததாக காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.



Body:அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் ஏரி 850ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை ஒட்டி அம்பத்தூர் பகுதிகளான முத்தமிழ் நகர், கங்கைநகர், எஸ்.எஸ்.நகர் ஆகிய இடங்களில் 650க்கு மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. இதனை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து  கடந்த அக்டோபர் மாதம் ஆக்கிரமிப்பு வீடுகளை சென்னை மாவட்ட வருவாய் துறையையும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சேர்ந்து ஆக்கிரமிப்பாளர்களின் எதிர்ப்பை மீறி அகற்றினர். 
இந்த நிலையில் முத்தமிழ் நகர் மக்கள் நீதிமன்றம் சென்று தங்களுக்கு சாதகமான ஆர்டர் பெற்றதாக கூறி அங்கு மீண்டும் அதே இடத்தில்   வீடுகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாபு, வருவாய் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தங்கள் வைத்திருக்கும் ஆர்டர் செல்லாது எனக்கூறி

25க்கும் மேற்பட்ட வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு இருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அம்பத்தூர் காவல் ஆய்வாளர் போர்க்கொடி தலைமையில் காவல் துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது அங்கிருந்த குணசேகரன் என்பவரின் மகள் மாலினியின் துப்பட்டாவை ஆய்வாளர் பொற்கொடி ஆண் காவலர்கள் மத்தியில் இழுத்ததாக கூறப்படுகின்றது.இதனை அடுத்து தன்னை ஆண் காவலர்கள் மத்தியில் துப்பட்டாவை இழுத்து மானபங்கம் செய்ததாக ஆய்வாளர் பொற்கொடி மீது சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமாரியிடம் பாதிக்கப்பட்ட பெண் உட்பட அப்பகுதி மக்கள் ஆய்வாளர் பொற்கொடி மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் அளித்துள்ளனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.