ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வழக்கறிஞர்கள் முற்றுகை!

author img

By

Published : Jul 16, 2019, 9:31 AM IST

திருவள்ளூர்: வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வழக்கறிஞர்கள் முற்றுகை

2011ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை 205 திட்டத்திற்காக பல்வேறு கிராமங்களில் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த ஆர்பிட்ரேஷன் வழக்குகளை வட்டாட்சியர் மதன் குப்புராஜ் போலி ஆவணங்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

இதையடுத்து, அவர் மீது கிரிமினல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக வளாகத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டனர்.

இதனால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரை சந்தித்து இவர்கள் புகார் மனு கொடுத்தனர்.

2011ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை 205 திட்டத்திற்காக பல்வேறு கிராமங்களில் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த ஆர்பிட்ரேஷன் வழக்குகளை வட்டாட்சியர் மதன் குப்புராஜ் போலி ஆவணங்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

இதையடுத்து, அவர் மீது கிரிமினல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக வளாகத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டனர்.

இதனால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரை சந்தித்து இவர்கள் புகார் மனு கொடுத்தனர்.

Intro:வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த ஆர்பிட்ரேஷன்( நில ஆர்ஜிதம்) குறித்த வழக்கு ஆவணங்களை தனி நபர்கள் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து வழக்கை திசைதிருப்பும் எம் பிரிவு வட்டாட்சியர் மதன் குப்புராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Body:திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கறிஞர் ராம் குமார் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்து ஆட்சியரகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் அப்போது 2011 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை 205 திட்டத்திற்கான பல்வேறு கிராமங்களில் ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரியும் புரோக்கர்களின் ஆதிக்கத்தில் சிக்கியுள்ள எம் பிரிவு வட்டாட்சியர் மதன் குப்புராஜ் வழக்கறிஞர்களை இழிவாக பேசுவதை கண்டித்தும் மேலும் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த ஆர்பிட்ரேஷன் வழக்குகளை வட்டாட்சியர் மதன் குப்புராஜ் தனிநபர் ஆர்வமுடன் சேர்ந்து புதிய ஆவணங்களை போலியாக தயாரித்து வழக்குகளை திசைதிருப்பும் முயற்சி மேற்கொண்டுள்ளார் இதை கண்டித்தும் மேலும் இந்த புதிய ஆவணங்கள் தயாரித்த குற்றத்திற்காக அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் வலியுறுத்தியும் கோஷமிட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு உள்ளே சென்றனர் இதனால் ஆட்சியில் அலுவலகம் பெரிதும் பரபரப்பான நிலையில் காணப்பட்டது.பின்னர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரை சந்தித்து புகார் மனுவைக் கொடுத்தனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.