ETV Bharat / state

நிவாரண உதவியாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jul 7, 2020, 4:02 PM IST

திருவள்ளூர்: கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள்

கரோனா ஊரடங்கால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவியாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தமிழ்நாடு அரசு தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவித்துள்ள 1,000 ரூபாய் நிவாரண உதவியும் தடையின்றி விரைவாக வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினர்.

3 மாதங்களாக ஊரடங்கால் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளதால் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு முடியும்வரை மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியாக மத்திய, மாநில அரசுகள் வழங்கிட வேண்டும் எனவும் அப்போது கேட்டுக்கொண்டனர்.

கரோனா ஊரடங்கால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவியாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தமிழ்நாடு அரசு தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவித்துள்ள 1,000 ரூபாய் நிவாரண உதவியும் தடையின்றி விரைவாக வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினர்.

3 மாதங்களாக ஊரடங்கால் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளதால் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு முடியும்வரை மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியாக மத்திய, மாநில அரசுகள் வழங்கிட வேண்டும் எனவும் அப்போது கேட்டுக்கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.