ETV Bharat / state

குப்பையில் முளைத்த கொலு பொம்மைகள் - வியக்க வைக்கும் இளைஞர்!

author img

By

Published : Oct 23, 2020, 7:28 PM IST

குப்பையில் தூக்கி வீசப்படும் உடைந்த வளையல்கள், ஐஸ்கிரீம் டப்பாக்கள், ஜெல்லி கவர்களைக் கொண்டு விதவிதமான கொலு பொருள்களை தயாரித்து அசத்தும் திருநெல்வேலி இளைஞரை பற்றி இந்த சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம்...

வியக்க வைக்கும் இளைஞர்
வியக்க வைக்கும் இளைஞர்

கரோனா பரவிவரும் இந்த காலகட்டத்துக்கு மத்தியில் நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை பொது மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கொலு பொம்மை வைத்து வழிபட்டு வருகின்றனர். இருப்பினும் பெரும்பாலும் வடமாநிலத்தில் அதிகளவில் தசரா எனும் இந்த நவராத்திரி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வீடுகளில் கொலு வைக்கும் பழக்கம் பெரும்பான்மையான மக்களிடம் இருந்து வருகிறது. தென்மாவட்டமான நெல்லையை பொறுத்தவரை சிலர் மட்டுமே கொலு பொம்மைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வித்தியாசமான முறையில் கடந்த 12 ஆண்டுகளாக மிகுந்த ஆர்வத்துடன் வீடுகளில் கொலு பொம்மை வைத்து வழிபட்டு வரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடுகளில் பயன்படுத்திவிட்டு குப்பையில் தூக்கி வீசப்படும் உடைந்த வளையல்கள், ஐஸ்கிரீம் டப்பாக்கள், ஆல்-அவுட் டப்பாக்கள், சிறுவர்கள் திண்பண்டமான ஜெல்லிக் கவர்கள் உள்ளிட்ட பொருள்களை வைத்து விதவிதமான அலங்காரப் பொருள்களை தயாரித்து தனது வீடுகளில் அலங்கரித்து உள்ளார்.

யார்? இந்த இளைஞர் என்பதை பார்க்கலாம். திருநெல்வேலி நல்மேய்ப்பர் நகரைச் சேர்ந்த வடிவேல் மீனா தம்பதியின் மகன் தான் கௌதம்(25). இவருக்கு சிறு வயதிலிருந்தே பக்கத்து வீடுகளில் கொலுவைத்து வழிபடுவதைப் பார்த்து ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 2008ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து 12 ஆண்டுகளாக கௌதம் தனது வீட்டில் மிகுந்த ஆர்வத்துடன் கொலு பொம்மைகளை வைத்து நவராத்திரியை கொண்டாடுகிறார்.

இதில் விசேஷம் என்னவென்றால் வழக்கமான கொலு பொம்மைகள் மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது விதமான பொம்மைகளை வைத்து வரும் கௌதம் இந்த ஆண்டு புது முயற்சியாக ஒன்றுக்கும் உபயோகப்படாது என்று நம்மால் தூக்கி வீசப்படும் பொருள்களை ஆச்சரியப்படும் வகையில் கலைநயத்துடன் மாற்றி அதை கொலு பொம்மைகளுக்கு இடையே வைத்து வீட்டை அலங்கரித்து உள்ளார். அதன்படி உடைந்த வளையல்களை மெழுகுவர்த்தி மூலம் வளைத்து வீட்டின் வாசலில் தொங்கவிடும் அலங்கார பொருளாக மாற்றியுள்ளார்.

அதேபோல் பால், ஐஸ் கிரீம் டப்பாக்களை சேகரித்து அதன்மீது வண்ணங்கள் தீட்டி அலங்கரித்து அதையும் வாசலில் தொங்க விடும் அலங்கார பொருளாக மாற்றியுள்ளார். கொசு அழிப்பு இயந்திரமான ஆல்அவுட் டப்பாக்களைக் கொண்டு விதவிதமான அலங்கார பொருள்களை தயாரித்துள்ளார். மேலும் காதில் அழுக்கு எடுக்க பயன்படும் இயர் பட்ஸ் குச்சிகள், பெண்கள் கழுத்தில் அணியும் பாசிகள், கோயில்களில் பிரசாதம் வழங்க பயன்படும் தெர்மாகோல் பிளேட்டுகள், டீ கப் என பல்வேறு பொருள்களை கொண்டு விதவிதமான அலங்காரப் பொருள்கள் தயாரித்து கௌதம் அசத்தியுள்ளார்.

அதேபோல் தெர்மாகோலை கொண்டு 11 அடி கொண்ட பெருமாள் சிலையை தத்ரூபமாக செய்து தனது வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்து வருகிறார். அதாவது பெருமாளின் தலைப்பகுதியை மட்டும் கடையில் வாங்கி கை, கால் உடல் பகுதிகளை தெர்மாகோல் மூலம் செய்து அதன்மேல் சிறிதளவும் கூட குறை கண்டுபிடிக்க முடியாத வகையில் பட்டுத் துணிகளை கொண்டும் கோல்டன் பேப்பர்களை கொண்டும் அலங்கரித்து உண்மையான சிலை போன்ற பெருமாளை வடிவமைத்துள்ளார்.

கௌதம் தற்போது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கப்பல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் இவர் நவராத்திரி பண்டிகையை கொண்டாட தவறுவதில்லையாம். தினமும் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் வீட்டில் அம்மன், பெருமாள் சிலைகளை அலங்காரம் செய்து வழிபட்டு வருகிறார். இவரது வீடு முழுவதும் எங்கு பார்த்தாலும் கொலு பொம்மைகள் ஆகவும் அலங்காரப் பொருளாக காட்சியளிக்கிறது. வீட்டுக்கு வந்தவுடன் கோயிலுக்குள் நுழைந்தது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்த செய்துள்ளார்.

குறிப்பாக தெர்மாக்கோல் தட்டு, சாமி கும்பிட பயன்படும் பத்தி டப்பாவை கொண்டு மிக அழகான தேர் ஒன்றை வடிவமைத்துள்ளார். பார்ப்பதற்கு நிஜமாகவே மரக்கட்டைகளால் தயாரிக்கப்பட்ட தேர் போன்று காட்சியளிக்கும் இந்த தேர் மிக மிக எளிய எடை கொண்டது என்கிறார் கெளதம். அதேபோல் ஐஸ்கிரீம் குச்சிகளை கொண்டு தத்துரூபமாக மற்றொரு சிறிய தேர் ஒன்றை தயாரித்துள்ளார்.

அதன் அடிப்பகுதியில், பழைய காலத்தில் ட்யூப் லைட் மாட்டுவதற்காக பயன்படுத்தப்படும் சக்கர வடிவிலான கட்டைகளைக் கொண்டு தேரின் சக்கரத்தை உருவாக்கியுள்ளார். சக்கரத்தை இணைக்கும் பகுதியை மறைக்கும் வகையில் காத்தாடி அடிப்பகுதியில் உள்ள பூக்களைக் கொண்டு பொருத்தி தங்க ரதம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இது போன்று எண்ணற்ற அலங்கார பொருள்களை தனது கைவண்ணத்தால் கௌதம் உருவாக்கியுள்ளார்.

அக்கம் பக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் இவரது கொலு பொம்மைகளை பார்க்க வந்தபோது இவர் தயாரித்த அலங்காரப் பொருள்களை கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். இந்த இளம் வயதில் இவ்வளவு ஆர்வமுடன் வீட்டில் கொலு பொம்மை வைப்பதுடன் தனது கைவண்ணத்தில் அலங்காரப் பொருள்களை தயாரித்து வீடு முழுவதும் அலங்கரித்து வைத்ததை கண்டு பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர்.

இது குறித்து கௌதம் நம்மிடம் கூறுகையில், "நான் 8ஆம் வகுப்பு படிக்கும்போது கொலு பொம்மைகள் வைக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. கொலு பொம்மை வைத்து வழிபடுவதன் மூலம் நமது அண்டை வீட்டாரிடம் ஒரு நல்ல உறவு முறை ஏற்படுகிறது. ஆன்மிக ரீதியாக கொலு பொம்மை வைப்பதால் இந்த பத்து நாட்களாக நம் வீட்டிற்கு வரும் பொதுமக்கள் உருவத்தில் கடவுள் வந்து பிரசாதம் வாங்கிச் செல்வதாக ஐதீகம் உள்ளது.

புராணக் கதைகளை எடுத்துரைக்கும் வகையில் கண்ணகி கதை, மனுநீதிச் சோழன் கதை, புட்டுக்கு மண் சுமந்த கதை உள்ளிட்ட பல்வேறு கதைகள் அடங்கிய பொம்மைகளை காட்சிப்படுத்தியுள்ளேன். குப்பையில் வீசப்படும் வேஸ்ட் பொருள்களை கொண்டு மிகவும் எளிய வகையில் விதவிதமான அலங்கார பொருள்களை தயாரிக்க முடியும்" என்றார்.

இதுகுறித்து பக்கத்து வீட்டை சேர்ந்த மகேஸ்வரி கூறுகையில், "பல வீடுகளில் கொலு பொம்மை வைத்ததை பார்த்துள்ளேன். ஆனால் இதுபோன்ற வித்தியாசமான முறையில் வேஸ்ட் பொருள்களை கொண்டு அலங்காரப் பொருள்களை தயாரிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். நவராத்திரி என்றால் என்னவென்றே தெரியாமல் செல்போனில் மூழ்கி கிடக்கும் பல இளைஞர்களுக்கு மத்தியில் அந்த நவராத்திரி கொண்டாட்டத்தின் மூலம் தனது கைவினை திறனை வெளிப்படுத்தி உள்ள இளைஞர் கெளதமின் செயல் பாராட்டுக்குரியதே" என்றார்.

இதையும் படிங்க: நாடே வியக்கும் அளவிற்கு ஒரு அறிவிப்பு வரும்” - அமைச்சர் செங்கோட்டையன்

கரோனா பரவிவரும் இந்த காலகட்டத்துக்கு மத்தியில் நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை பொது மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கொலு பொம்மை வைத்து வழிபட்டு வருகின்றனர். இருப்பினும் பெரும்பாலும் வடமாநிலத்தில் அதிகளவில் தசரா எனும் இந்த நவராத்திரி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வீடுகளில் கொலு வைக்கும் பழக்கம் பெரும்பான்மையான மக்களிடம் இருந்து வருகிறது. தென்மாவட்டமான நெல்லையை பொறுத்தவரை சிலர் மட்டுமே கொலு பொம்மைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வித்தியாசமான முறையில் கடந்த 12 ஆண்டுகளாக மிகுந்த ஆர்வத்துடன் வீடுகளில் கொலு பொம்மை வைத்து வழிபட்டு வரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடுகளில் பயன்படுத்திவிட்டு குப்பையில் தூக்கி வீசப்படும் உடைந்த வளையல்கள், ஐஸ்கிரீம் டப்பாக்கள், ஆல்-அவுட் டப்பாக்கள், சிறுவர்கள் திண்பண்டமான ஜெல்லிக் கவர்கள் உள்ளிட்ட பொருள்களை வைத்து விதவிதமான அலங்காரப் பொருள்களை தயாரித்து தனது வீடுகளில் அலங்கரித்து உள்ளார்.

யார்? இந்த இளைஞர் என்பதை பார்க்கலாம். திருநெல்வேலி நல்மேய்ப்பர் நகரைச் சேர்ந்த வடிவேல் மீனா தம்பதியின் மகன் தான் கௌதம்(25). இவருக்கு சிறு வயதிலிருந்தே பக்கத்து வீடுகளில் கொலுவைத்து வழிபடுவதைப் பார்த்து ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 2008ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து 12 ஆண்டுகளாக கௌதம் தனது வீட்டில் மிகுந்த ஆர்வத்துடன் கொலு பொம்மைகளை வைத்து நவராத்திரியை கொண்டாடுகிறார்.

இதில் விசேஷம் என்னவென்றால் வழக்கமான கொலு பொம்மைகள் மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது விதமான பொம்மைகளை வைத்து வரும் கௌதம் இந்த ஆண்டு புது முயற்சியாக ஒன்றுக்கும் உபயோகப்படாது என்று நம்மால் தூக்கி வீசப்படும் பொருள்களை ஆச்சரியப்படும் வகையில் கலைநயத்துடன் மாற்றி அதை கொலு பொம்மைகளுக்கு இடையே வைத்து வீட்டை அலங்கரித்து உள்ளார். அதன்படி உடைந்த வளையல்களை மெழுகுவர்த்தி மூலம் வளைத்து வீட்டின் வாசலில் தொங்கவிடும் அலங்கார பொருளாக மாற்றியுள்ளார்.

அதேபோல் பால், ஐஸ் கிரீம் டப்பாக்களை சேகரித்து அதன்மீது வண்ணங்கள் தீட்டி அலங்கரித்து அதையும் வாசலில் தொங்க விடும் அலங்கார பொருளாக மாற்றியுள்ளார். கொசு அழிப்பு இயந்திரமான ஆல்அவுட் டப்பாக்களைக் கொண்டு விதவிதமான அலங்கார பொருள்களை தயாரித்துள்ளார். மேலும் காதில் அழுக்கு எடுக்க பயன்படும் இயர் பட்ஸ் குச்சிகள், பெண்கள் கழுத்தில் அணியும் பாசிகள், கோயில்களில் பிரசாதம் வழங்க பயன்படும் தெர்மாகோல் பிளேட்டுகள், டீ கப் என பல்வேறு பொருள்களை கொண்டு விதவிதமான அலங்காரப் பொருள்கள் தயாரித்து கௌதம் அசத்தியுள்ளார்.

அதேபோல் தெர்மாகோலை கொண்டு 11 அடி கொண்ட பெருமாள் சிலையை தத்ரூபமாக செய்து தனது வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்து வருகிறார். அதாவது பெருமாளின் தலைப்பகுதியை மட்டும் கடையில் வாங்கி கை, கால் உடல் பகுதிகளை தெர்மாகோல் மூலம் செய்து அதன்மேல் சிறிதளவும் கூட குறை கண்டுபிடிக்க முடியாத வகையில் பட்டுத் துணிகளை கொண்டும் கோல்டன் பேப்பர்களை கொண்டும் அலங்கரித்து உண்மையான சிலை போன்ற பெருமாளை வடிவமைத்துள்ளார்.

கௌதம் தற்போது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கப்பல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் இவர் நவராத்திரி பண்டிகையை கொண்டாட தவறுவதில்லையாம். தினமும் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் வீட்டில் அம்மன், பெருமாள் சிலைகளை அலங்காரம் செய்து வழிபட்டு வருகிறார். இவரது வீடு முழுவதும் எங்கு பார்த்தாலும் கொலு பொம்மைகள் ஆகவும் அலங்காரப் பொருளாக காட்சியளிக்கிறது. வீட்டுக்கு வந்தவுடன் கோயிலுக்குள் நுழைந்தது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்த செய்துள்ளார்.

குறிப்பாக தெர்மாக்கோல் தட்டு, சாமி கும்பிட பயன்படும் பத்தி டப்பாவை கொண்டு மிக அழகான தேர் ஒன்றை வடிவமைத்துள்ளார். பார்ப்பதற்கு நிஜமாகவே மரக்கட்டைகளால் தயாரிக்கப்பட்ட தேர் போன்று காட்சியளிக்கும் இந்த தேர் மிக மிக எளிய எடை கொண்டது என்கிறார் கெளதம். அதேபோல் ஐஸ்கிரீம் குச்சிகளை கொண்டு தத்துரூபமாக மற்றொரு சிறிய தேர் ஒன்றை தயாரித்துள்ளார்.

அதன் அடிப்பகுதியில், பழைய காலத்தில் ட்யூப் லைட் மாட்டுவதற்காக பயன்படுத்தப்படும் சக்கர வடிவிலான கட்டைகளைக் கொண்டு தேரின் சக்கரத்தை உருவாக்கியுள்ளார். சக்கரத்தை இணைக்கும் பகுதியை மறைக்கும் வகையில் காத்தாடி அடிப்பகுதியில் உள்ள பூக்களைக் கொண்டு பொருத்தி தங்க ரதம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இது போன்று எண்ணற்ற அலங்கார பொருள்களை தனது கைவண்ணத்தால் கௌதம் உருவாக்கியுள்ளார்.

அக்கம் பக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் இவரது கொலு பொம்மைகளை பார்க்க வந்தபோது இவர் தயாரித்த அலங்காரப் பொருள்களை கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். இந்த இளம் வயதில் இவ்வளவு ஆர்வமுடன் வீட்டில் கொலு பொம்மை வைப்பதுடன் தனது கைவண்ணத்தில் அலங்காரப் பொருள்களை தயாரித்து வீடு முழுவதும் அலங்கரித்து வைத்ததை கண்டு பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர்.

இது குறித்து கௌதம் நம்மிடம் கூறுகையில், "நான் 8ஆம் வகுப்பு படிக்கும்போது கொலு பொம்மைகள் வைக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. கொலு பொம்மை வைத்து வழிபடுவதன் மூலம் நமது அண்டை வீட்டாரிடம் ஒரு நல்ல உறவு முறை ஏற்படுகிறது. ஆன்மிக ரீதியாக கொலு பொம்மை வைப்பதால் இந்த பத்து நாட்களாக நம் வீட்டிற்கு வரும் பொதுமக்கள் உருவத்தில் கடவுள் வந்து பிரசாதம் வாங்கிச் செல்வதாக ஐதீகம் உள்ளது.

புராணக் கதைகளை எடுத்துரைக்கும் வகையில் கண்ணகி கதை, மனுநீதிச் சோழன் கதை, புட்டுக்கு மண் சுமந்த கதை உள்ளிட்ட பல்வேறு கதைகள் அடங்கிய பொம்மைகளை காட்சிப்படுத்தியுள்ளேன். குப்பையில் வீசப்படும் வேஸ்ட் பொருள்களை கொண்டு மிகவும் எளிய வகையில் விதவிதமான அலங்கார பொருள்களை தயாரிக்க முடியும்" என்றார்.

இதுகுறித்து பக்கத்து வீட்டை சேர்ந்த மகேஸ்வரி கூறுகையில், "பல வீடுகளில் கொலு பொம்மை வைத்ததை பார்த்துள்ளேன். ஆனால் இதுபோன்ற வித்தியாசமான முறையில் வேஸ்ட் பொருள்களை கொண்டு அலங்காரப் பொருள்களை தயாரிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். நவராத்திரி என்றால் என்னவென்றே தெரியாமல் செல்போனில் மூழ்கி கிடக்கும் பல இளைஞர்களுக்கு மத்தியில் அந்த நவராத்திரி கொண்டாட்டத்தின் மூலம் தனது கைவினை திறனை வெளிப்படுத்தி உள்ள இளைஞர் கெளதமின் செயல் பாராட்டுக்குரியதே" என்றார்.

இதையும் படிங்க: நாடே வியக்கும் அளவிற்கு ஒரு அறிவிப்பு வரும்” - அமைச்சர் செங்கோட்டையன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.