ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த விபரீதம் - woman was attacked by her father in thirunelveli

திருமணத்தை மீறி உறவு வைத்துக் கொண்ட மகளை, தந்தை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த விபரீதம்
திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த விபரீதம்
author img

By

Published : Jun 24, 2021, 5:56 PM IST

திருநெல்வேலி: கிருஷ்ணபேரி பகுதியை சேர்ந்தவர் சேர்மதுரை, கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி இசக்கி கவிதா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையறிந்த இசக்கி கவிதாவின் கணவர், தந்தை பலமுறை அவரை எச்சரித்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு இசக்கி கவிதா ராமச்சந்திரனுடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இன்று காலை அவர்கள் இருவரும் வீடு திரும்பியதாக தகவல் தெரிந்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற இசக்கி கவிதாவின் தந்தை, கணவர் சேர்மதுரை, அவருடைய தம்பி ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த இசக்கி கவிதாவின் தந்தை கையில் வைத்திருந்த ஆயுதங்களால் இருவரையும் தாக்கியுள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இசக்கி கவிதா, ராமச்சந்திரனை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் சேர்மதுரையை கைது செய்துள்ளனர். தப்பியோடிய அவளின் தந்தை, சேர்மதுரையின் தம்பியை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாதி உடல் புதைக்கப்பட்ட குழந்தை உயிரோடு மீட்பு!

திருநெல்வேலி: கிருஷ்ணபேரி பகுதியை சேர்ந்தவர் சேர்மதுரை, கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி இசக்கி கவிதா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையறிந்த இசக்கி கவிதாவின் கணவர், தந்தை பலமுறை அவரை எச்சரித்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு இசக்கி கவிதா ராமச்சந்திரனுடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இன்று காலை அவர்கள் இருவரும் வீடு திரும்பியதாக தகவல் தெரிந்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற இசக்கி கவிதாவின் தந்தை, கணவர் சேர்மதுரை, அவருடைய தம்பி ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த இசக்கி கவிதாவின் தந்தை கையில் வைத்திருந்த ஆயுதங்களால் இருவரையும் தாக்கியுள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இசக்கி கவிதா, ராமச்சந்திரனை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் சேர்மதுரையை கைது செய்துள்ளனர். தப்பியோடிய அவளின் தந்தை, சேர்மதுரையின் தம்பியை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாதி உடல் புதைக்கப்பட்ட குழந்தை உயிரோடு மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.