ETV Bharat / state

பல் பிடுங்கிய விவகாரம்.. காத்தாடிய விசாரணை கமிஷன்... மீண்டும் 2 நாட்கள் விசாரணை என அறிவிப்பு! - Amudha IAS

நெல்லையில் பல் பிடுங்கிய விவகாரத்தில் ஏற்கனவே நடைபெற்ற உயர் மட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட ஆஜராகாத நிலையில், மீண்டும் விசாரணை அதிகாரி வருகிற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்த உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல் பிடுங்கிய விவகாரம்.. மீண்டும் 2 நாட்கள் விசாரணை நடத்துவதாக அறிவிப்பு!
பல் பிடுங்கிய விவகாரம்.. மீண்டும் 2 நாட்கள் விசாரணை நடத்துவதாக அறிவிப்பு!
author img

By

Published : Apr 13, 2023, 4:26 PM IST

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் பகுதிகளில் விசாரணைக் கைதிகளின் பல்லை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பிடுங்கியதாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளருமான அமுதா உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில், தனது முதல் நாள் விசாரணையைத் தொடங்கினார்.

ஆனால் அன்று, பாதிக்கப்பட்ட ஒருவர் கூட விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதேநேரம் ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முன்பு, 9 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தனர். இவர்களில் மூன்று பேர் தவிர, மீதம் உள்ள ஆறு பேர் போலீஸ் அதிகாரி தங்கள் பல்லை பிடுங்கியதாக விளக்கம் அளித்ததாகக் கூறப்பட்டது. இது போன்ற சூழ்நிலையில், உயர் மட்ட அதிகாரியிடம் யாரும் விசாரணைக்கு ஆஜராகதால் குழப்பம் ஏற்பட்டது.

எனவே, விசாரணை அதிகாரி அமுதா, சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். இதனிடையே உயர்மட்ட விசாரணையை புறக்கணிப்பதாக பாதிக்கப்பட்ட சிலரின் வழக்கறிஞர் மகாராஜன் தெரிவித்தார். இந்த நிலையில் உயர்மட்ட விசாரணை அதிகாரி அமுதா, மீண்டும் வருகிற 17 மற்றும் 18 ஆகிய நாட்களில், திருநெல்வேலியில் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக நெல்லை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளை துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள, தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ள உயர்மட்ட விசாரணை அதிகாரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா ஐஏஎஸ், கடந்த 10.04.2023 அன்று, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமது விசாரணை அலுவல்களை மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக அவர், வருகிற 17.04.2023 மற்றும் 18.04.2023 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், தமது அடுத்தகட்ட விசாரணை அலுவல்களை மேற்கொள்ள உள்ளார்.

எனவே, அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் காவல் துறையால் விசாரணைக் கைதிகளை துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாக, மேற்படி விசாரணை அலுவலரிடம் நேரில் புகார் அளிக்க விரும்புபவர்கள், ஆவணங்கள், தகவல்கள் அல்லது வாக்குமூலங்களை அளிக்க விரும்புவோர் 17.04.2023 மற்றும் 18.04.2023 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உயர்மட்ட விசாரணை அலுவலர் முன்பாக நேரில் ஆஜராகலாம்.

ஏற்கனவே சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அல்லது உட்கோட்ட நடுவரிடம் புகார் அல்லது வாக்குமூலம் அளித்தவர்கள், மீண்டும் ஒரு முறை வர வேண்டியது கட்டாயம் இல்லை. ஆனால், உயர்மட்ட விசாரணை அலுவலர் முன்னிலையில் மீண்டும் ஒரு முறை வாக்குமூலம் அளிக்க விரும்பினாலோ, புகார் அல்லது கூடுதல் தகவல்களை அளிக்க விரும்பினாலோ, அவர்களும் நேரில் வரலாம்.

பாதிக்கப்பட்டு இதுவரை புகார் தெரிவிக்காத நபர்கள் யாரேனும் இருப்பினும், அவர்களும் விசாரணை அதிகாரியை நேரில் சந்தித்துப் புகார் தெரிவிக்கலாம். மேலும், மேற்படி விசாரணை அலுவலரிடம் நேரடியாக புகார் அளிக்க இயலாதவர்கள் ambai.inquiry@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக (18.04.2023 மாலை 4 மணிவரை அனைத்து நாட்களிலும்) புகார் அளிக்கலாம் அல்லது 17.04.2023 மற்றும் 18.04.2023 காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை +91 8248887233 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு (கால் செய்யலாம் அல்லது வாட்ஸ்அப் செய்யலாம்) புகார் அளிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பல்வீர் சிங் பல் பிடுங்கிய விவகாரம் - விசாரணைக்கு ஒருவர் கூட ஆஜராகாததால் அதிகாரிகள் குழப்பம்!

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் பகுதிகளில் விசாரணைக் கைதிகளின் பல்லை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பிடுங்கியதாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளருமான அமுதா உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில், தனது முதல் நாள் விசாரணையைத் தொடங்கினார்.

ஆனால் அன்று, பாதிக்கப்பட்ட ஒருவர் கூட விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதேநேரம் ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முன்பு, 9 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தனர். இவர்களில் மூன்று பேர் தவிர, மீதம் உள்ள ஆறு பேர் போலீஸ் அதிகாரி தங்கள் பல்லை பிடுங்கியதாக விளக்கம் அளித்ததாகக் கூறப்பட்டது. இது போன்ற சூழ்நிலையில், உயர் மட்ட அதிகாரியிடம் யாரும் விசாரணைக்கு ஆஜராகதால் குழப்பம் ஏற்பட்டது.

எனவே, விசாரணை அதிகாரி அமுதா, சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். இதனிடையே உயர்மட்ட விசாரணையை புறக்கணிப்பதாக பாதிக்கப்பட்ட சிலரின் வழக்கறிஞர் மகாராஜன் தெரிவித்தார். இந்த நிலையில் உயர்மட்ட விசாரணை அதிகாரி அமுதா, மீண்டும் வருகிற 17 மற்றும் 18 ஆகிய நாட்களில், திருநெல்வேலியில் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக நெல்லை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளை துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள, தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ள உயர்மட்ட விசாரணை அதிகாரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா ஐஏஎஸ், கடந்த 10.04.2023 அன்று, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமது விசாரணை அலுவல்களை மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக அவர், வருகிற 17.04.2023 மற்றும் 18.04.2023 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், தமது அடுத்தகட்ட விசாரணை அலுவல்களை மேற்கொள்ள உள்ளார்.

எனவே, அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் காவல் துறையால் விசாரணைக் கைதிகளை துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாக, மேற்படி விசாரணை அலுவலரிடம் நேரில் புகார் அளிக்க விரும்புபவர்கள், ஆவணங்கள், தகவல்கள் அல்லது வாக்குமூலங்களை அளிக்க விரும்புவோர் 17.04.2023 மற்றும் 18.04.2023 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உயர்மட்ட விசாரணை அலுவலர் முன்பாக நேரில் ஆஜராகலாம்.

ஏற்கனவே சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அல்லது உட்கோட்ட நடுவரிடம் புகார் அல்லது வாக்குமூலம் அளித்தவர்கள், மீண்டும் ஒரு முறை வர வேண்டியது கட்டாயம் இல்லை. ஆனால், உயர்மட்ட விசாரணை அலுவலர் முன்னிலையில் மீண்டும் ஒரு முறை வாக்குமூலம் அளிக்க விரும்பினாலோ, புகார் அல்லது கூடுதல் தகவல்களை அளிக்க விரும்பினாலோ, அவர்களும் நேரில் வரலாம்.

பாதிக்கப்பட்டு இதுவரை புகார் தெரிவிக்காத நபர்கள் யாரேனும் இருப்பினும், அவர்களும் விசாரணை அதிகாரியை நேரில் சந்தித்துப் புகார் தெரிவிக்கலாம். மேலும், மேற்படி விசாரணை அலுவலரிடம் நேரடியாக புகார் அளிக்க இயலாதவர்கள் ambai.inquiry@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக (18.04.2023 மாலை 4 மணிவரை அனைத்து நாட்களிலும்) புகார் அளிக்கலாம் அல்லது 17.04.2023 மற்றும் 18.04.2023 காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை +91 8248887233 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு (கால் செய்யலாம் அல்லது வாட்ஸ்அப் செய்யலாம்) புகார் அளிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பல்வீர் சிங் பல் பிடுங்கிய விவகாரம் - விசாரணைக்கு ஒருவர் கூட ஆஜராகாததால் அதிகாரிகள் குழப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.