ETV Bharat / state

ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திற்கு தயாராகும் நெல்லை! - ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் கோயில் தேர்

ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவையொட்டி தேர் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திற்கு தயாராகும் நெல்லை!
ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திற்கு தயாராகும் நெல்லை!
author img

By

Published : Jun 25, 2022, 1:13 PM IST

திருநெல்வேலி: ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் திருக்கோவில் திருத்தேரோட்டம் ஆனிப் பெருந்திருவிழா வரும் ஜூலை 3ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறுகிறது. 2 ஆண்டுகளுக்குப் பின்னர் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தலைமையில், மாநகராட்சி ஆணையாளர், திருக்கோவில் நிர்வாகம் பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திற்கு தயாராகும் நெல்லை!

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி திருத்தேர் ஓடும் நான்கு ரத வீதிகளில் உள்ள சாலைகளில் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர் நான்கு ரத வீதிகளிலும் தடையின்றி ஓட வசதியாக சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மின்சார வாரியம் மூலம் இடையூறாக உள்ள மின் கம்பிகளை முன்கூட்டியே அகற்றி பாதுகாப்பாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள வருவார்கள் என்பதால் அடிப்படை வசதிகள் செய்ய மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நான்கு ரத வீதிகளிலும் தற்காலிக கழிப்பறை அமைத்தல், ங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நெல்லையப்பர் திருக்கோவில் நான்கு ரத வீதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சாலைகளில் இடையூறாக இருக்கும் தள்ளுவண்டி கடைகள் மற்றும் கடை முகப்புகளை ஊழியர்கள் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அப்புறப்படுத்தினர். தொடர்ந்து சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேர்த்திருவிழா - அரியலூரில் உள்ளூர் விடுமுறை!

திருநெல்வேலி: ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் திருக்கோவில் திருத்தேரோட்டம் ஆனிப் பெருந்திருவிழா வரும் ஜூலை 3ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறுகிறது. 2 ஆண்டுகளுக்குப் பின்னர் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தலைமையில், மாநகராட்சி ஆணையாளர், திருக்கோவில் நிர்வாகம் பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திற்கு தயாராகும் நெல்லை!

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி திருத்தேர் ஓடும் நான்கு ரத வீதிகளில் உள்ள சாலைகளில் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர் நான்கு ரத வீதிகளிலும் தடையின்றி ஓட வசதியாக சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மின்சார வாரியம் மூலம் இடையூறாக உள்ள மின் கம்பிகளை முன்கூட்டியே அகற்றி பாதுகாப்பாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள வருவார்கள் என்பதால் அடிப்படை வசதிகள் செய்ய மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நான்கு ரத வீதிகளிலும் தற்காலிக கழிப்பறை அமைத்தல், ங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நெல்லையப்பர் திருக்கோவில் நான்கு ரத வீதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சாலைகளில் இடையூறாக இருக்கும் தள்ளுவண்டி கடைகள் மற்றும் கடை முகப்புகளை ஊழியர்கள் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அப்புறப்படுத்தினர். தொடர்ந்து சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேர்த்திருவிழா - அரியலூரில் உள்ளூர் விடுமுறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.