ETV Bharat / state

தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த இளைஞர்கள் திடீர் சாலை மறியல்.. நெல்லையில் பரபரப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 7:10 PM IST

Tirunelveli: நெல்லை சந்திப்பு தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த இளைஞர்கள், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த இளைஞர்கள் திடீர் சாலை மறியல்
தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த இளைஞர்கள் திடீர் சாலை மறியல்
தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த இளைஞர்கள் திடீர் சாலை மறியல்.. நெல்லையில் பரபரப்பு!

திருநெல்வேலி: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழாவையொட்டி நெல்லை சந்திப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதேபோல் புலி தேவன் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை வரை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பால் குடங்கள் சுமந்தபடி வந்து அவரது திருவுருவச் சிலைக்குப் பாலாபிஷேகம் செய்தும் மலர் தூவியும் வழிப்பட்டனர்.

இந்த நிலையில், பல்வேறு பகுதிகளிலிருந்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக வந்த இளைஞர்களில் ஒரு சிலர், அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்தை வழிமறித்து, அதன் மேல் ஏறி ஆட தொடங்கினர். அப்போது அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்த முற்பட்ட போது இளைஞர்களுக்கும், காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கும், சாலை போக்குவரத்துக்கும் இடையூறு செய்த இளைஞர்களைக் காவல் துறையினர் பிடித்துச் சென்றனர். அந்த நேரத்தில் அங்கு இருந்த மற்ற இளைஞர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, அந்த இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

பின்னர், காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இதுபோன்ற செயல்களில் வரும் காலங்களில் ஈடுபடக் கூடாது என எழுதி வாங்கிய பின் அவர்களை அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: மதுரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்! தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை! பால பணிகளையும் துவக்கி வைத்தார்!

தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த இளைஞர்கள் திடீர் சாலை மறியல்.. நெல்லையில் பரபரப்பு!

திருநெல்வேலி: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழாவையொட்டி நெல்லை சந்திப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதேபோல் புலி தேவன் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை வரை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பால் குடங்கள் சுமந்தபடி வந்து அவரது திருவுருவச் சிலைக்குப் பாலாபிஷேகம் செய்தும் மலர் தூவியும் வழிப்பட்டனர்.

இந்த நிலையில், பல்வேறு பகுதிகளிலிருந்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக வந்த இளைஞர்களில் ஒரு சிலர், அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்தை வழிமறித்து, அதன் மேல் ஏறி ஆட தொடங்கினர். அப்போது அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்த முற்பட்ட போது இளைஞர்களுக்கும், காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கும், சாலை போக்குவரத்துக்கும் இடையூறு செய்த இளைஞர்களைக் காவல் துறையினர் பிடித்துச் சென்றனர். அந்த நேரத்தில் அங்கு இருந்த மற்ற இளைஞர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, அந்த இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

பின்னர், காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இதுபோன்ற செயல்களில் வரும் காலங்களில் ஈடுபடக் கூடாது என எழுதி வாங்கிய பின் அவர்களை அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: மதுரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்! தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை! பால பணிகளையும் துவக்கி வைத்தார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.