ETV Bharat / state

நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தலைப் புறக்கணிக்கத் தயாராகும் கிராம மக்கள் - ஏன் தெரியுமா?

author img

By

Published : Oct 7, 2019, 6:35 PM IST

திருநெல்வேலி: நாங்குநேரி, மாவடியில் சரியான சாலை வசதிகள் செய்து தரப்படாததால் இடைத்தேர்தலைப் புறக்கணித்து, கறுப்புக்கொடி ஏற்றிப் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அவர்களைக் காவல்துறையினர் மிரட்டுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

Nanguneri destroyed bridge and roads

நெல்லை மாவட்டம், நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட மாவடியில், சுமார் 300க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். மண்பாண்டம் செய்வதே இந்த கிராமங்களின் பிரதானத் தொழிலாக உள்ளது. நாங்குநேரி தொகுதிக்கும், இராதாபுரம் தொகுதிக்கும் இடைபட்டப் பகுதியிலுள்ள இக்கிராமத்தில், சில ஆண்டுகளாகவே சாலை, பாலம் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

இதற்காக பொதுமக்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால், தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும், தங்கள் ஊருக்கு எந்த ஒரு வேட்பாளரும் ஓட்டுக்கேட்டு வரக்கூடாது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.

பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இதனைத் தொடர்ந்து இந்த கிராமத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தங்களின் தேவைகளை அரசு உடனடியாக நிறைவேற்றும்வரை தாங்கள் ஓட்டுப் போடப்போவதில்லை எனக்கூறி, தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி வைத்து, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாங்குநேரி மாவடியின் சீரற்ற சாலைகள்

இந்நிலையில் அமைச்சர்கள் வாக்கு கேட்டு வரும்போது கறுப்புக்கொடி ஏற்றிப் போராட்டம் நடத்தினால், குழந்தைகள் உட்பட அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்வோம் எனக் காவல்துறையினர் மிரட்டுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:

கேஆர்பி அணை நீர்வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நெல்லை மாவட்டம், நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட மாவடியில், சுமார் 300க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். மண்பாண்டம் செய்வதே இந்த கிராமங்களின் பிரதானத் தொழிலாக உள்ளது. நாங்குநேரி தொகுதிக்கும், இராதாபுரம் தொகுதிக்கும் இடைபட்டப் பகுதியிலுள்ள இக்கிராமத்தில், சில ஆண்டுகளாகவே சாலை, பாலம் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

இதற்காக பொதுமக்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால், தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும், தங்கள் ஊருக்கு எந்த ஒரு வேட்பாளரும் ஓட்டுக்கேட்டு வரக்கூடாது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.

பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இதனைத் தொடர்ந்து இந்த கிராமத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தங்களின் தேவைகளை அரசு உடனடியாக நிறைவேற்றும்வரை தாங்கள் ஓட்டுப் போடப்போவதில்லை எனக்கூறி, தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி வைத்து, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாங்குநேரி மாவடியின் சீரற்ற சாலைகள்

இந்நிலையில் அமைச்சர்கள் வாக்கு கேட்டு வரும்போது கறுப்புக்கொடி ஏற்றிப் போராட்டம் நடத்தினால், குழந்தைகள் உட்பட அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்வோம் எனக் காவல்துறையினர் மிரட்டுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:

கேஆர்பி அணை நீர்வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Intro:நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிகுட்பட்ட மாவடியில்  சாலைவசதிகள் பாலம் கட்டவில்லை என கூறி இடைத்தேர்தலை புறக்கணித்து கருப்புகொடி ஏற்றி வைத்து பொதுமக்கள் போராட்டம் அமைச்சர் ஓட்டுக்கேட்டு வரும்போது கருப்புகொடி போராட்டம் நடத்தினால் வழக்குப்பதிவு செய்து கைது செய்வோம் என காவல்துறையினர் மிரட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.Body:நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிகுட்பட்ட மாவடியில்  சாலைவசதிகள் பாலம் கட்டவில்லை என கூறி இடைத்தேர்தலை புறக்கணித்து கருப்புகொடி ஏற்றி வைத்து பொதுமக்கள் போராட்டம் அமைச்சர் ஓட்டுக்கேட்டு வரும்போது கருப்புகொடி போராட்டம் நடத்தினால் வழக்குப்பதிவு செய்து கைது செய்வோம் என காவல்துறையினர் மிரட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.


நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிகுட்பட்ட மாவடியில் சுமார் 300க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். மண்பாண்டம் செய்வதே இக்கிராமங்களின் பிரதான தொழிலாக உள்ளது. இக்கிராமானது நாங்குநேரி தொகுதிக்கும் இராதாபுரம் தொகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில் இருப்பதால் சில ஆண்டுகளாகவே இக்கிராமத்தில் சாலைவசதிகள் பாலம் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் நீண்ட நாள்களாக நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எங்களுக்கு எந்த ஒரு வசதியும் செய்துதரப்படவில்லை எனவே நாங்கள் இத்தேர்தலை புறக்கணிப்போம் என்றும் எங்கள் ஊருக்கு எந்த ஒரு வேட்பாளரும் ஓட்டுக்கேட்டு வரக்கூடாது என தெரிவித்திருந்தனர். அதன்படி பல்வேறு அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகள் கிராமத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் பலனளிக்கவில்லை எங்களின் தேவைகளை அரசு உடனடியாக நிறைவேற்றும்வரை நாங்கள் ஓட்டு போடமாட்டோம் எனவும் கூறி  தங்கள் வீடுகளில் கருப்புகொடி ஏற்றி வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் அமைச்சர்கள் ஓட்டுக்கேட்டு வரும்போது நீங்கள் கருப்புகொடி ஏந்தி போராட்டம் நடத்தினால் வழக்குப்பதிவு செய்து உங்களை கைது செய்வோம் என மிரட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் உங்கள் குழந்தைகள் மீது வழக்குப்பதிவு செய்தால் அவர்களின் வருங்காலம் பாதிக்கப்படும் என கூறி மிரட்டுவதாக கூறுகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.