ETV Bharat / state

சென்னை-குமரி இடையே தொழில் வழி முன்னேற்ற சாலை - எம்.சி. சம்பத் - south tamilnadu

திருநெல்வேலி: சென்னை -குமரி இடையே மத்திய அரசுடன் இணைந்து தொழில் வழி முன்னேற்ற சாலை அமைக்கப்பட உள்ளது தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.

minister sampath
author img

By

Published : Sep 14, 2019, 4:49 PM IST

திருநெல்வேலிக்கு வந்த தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வண்ணாரபேட்டை விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”முதலமைச்சர் வெளிநாடு சென்றதை ஸ்டாலின் குற்றம்சாட்டுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.

தென் மாவட்டங்களில் தொழில் முன்னேற்றம் அடையவேண்டும் என்ற அடிப்படையில் சென்னை கன்னியாகுமரி இடையே தொழில் வழி முன்னேற்ற சாலை அமையவுள்ளன. இது அமைந்தால் , சென்னை - குமரி தொழில் வழி முன்னேற்ற சாலை முதன்மை பெற்ற இடமாக இருக்கும். தமிழ்நாட்டில் தொழில் துறை மிகவும் சிறப்பாக உள்ளது” என்றார்.

திருநெல்வேலிக்கு வந்த தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வண்ணாரபேட்டை விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”முதலமைச்சர் வெளிநாடு சென்றதை ஸ்டாலின் குற்றம்சாட்டுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.

தென் மாவட்டங்களில் தொழில் முன்னேற்றம் அடையவேண்டும் என்ற அடிப்படையில் சென்னை கன்னியாகுமரி இடையே தொழில் வழி முன்னேற்ற சாலை அமையவுள்ளன. இது அமைந்தால் , சென்னை - குமரி தொழில் வழி முன்னேற்ற சாலை முதன்மை பெற்ற இடமாக இருக்கும். தமிழ்நாட்டில் தொழில் துறை மிகவும் சிறப்பாக உள்ளது” என்றார்.

Intro:தென் தமிழக மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை குமரி இடையே மத்திய அரசுடன் இணைந்து தொழில் வழி முன்னேற்ற சாலை அமைக்கப்பட உள்ளது என நெல்லையில் தொழில்துறை அமைச்சர் எம்சி சம்பத் பேட்டிBody:தென் தமிழக மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை குமரி இடையே மத்திய அரசுடன் இணைந்து தொழில் வழி முன்னேற்ற சாலை அமைக்கப்பட உள்ளது என நெல்லையில் தொழில்துறை அமைச்சர் எம்சி சம்பத் பேட்டி


பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நெல்லை மாவட்டம் வருகைதந்த தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வண்ணார்பேட்டை விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதல்வர் வெளி நாட்டு முதலீட்டார்களை சந்தித்து எடுக்கும் முயற்சி மிகப்பெரியது. எதிர்கட்சி தலைவர் இதை பாராட்ட வில்லை என்றாலும் குற்றம் சொல்லக்கூடாது. நாட்டில் உள்ள பல முதல்வர்கள் வெளிநாடு சென்றால் அங்கு உள்ள எதிர்கட்சிகள் குற்றம் சுமத்துவது கிடையாது. எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் என தெரிவித்தார்.
யாதும் ஊரே இணைய தளம் அமைக்கப்பட்டுள்ளது அதற்காக சென்னையில் உள்ள தொழில் துறை அலுவலகத்தில் லண்டன், துபாய், ஜப்பான் என நாட்டுக்கு ஒரு மையம் அமைத்து அதற்கென தனி ஐ.எ எஸ் அதிகாரிகள் நியமித்து அங்குள்ள முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய தொடர்ந்து கண்காக்க உள்ளோம். இந்த வெப்சைட் வருங்காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இஸ்ரேல் சென்று நீர் மேலான்மை குறித்த பயன்பாடை அறிய முதல்வர் செல்கிறார். தென் மாவட்டங்களில் தொழில் முன்னேற்றம் அடையவேண்டும் என்ற அடிப்படையில் சென்னை கன்னியாகுமரி தொழில் வழி முன்னேற்ற சாலை அமைய உள்ளது. இது அமையப்பெற்றால் 9 மாவட்டங்கள் பயன்பெறும்.இதற்க்கான திட்டம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. சென்னை - குமரி தொழில் வழி முன்னேற்ற சாலை முதன்மை பெற்ற இடமாக இருக்கும் என தெரிவித்தார். இந்திய அளவில் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. இதற்கான காரணம் தொழில் நுட்பம், தனியார் வங்கி கடன்,சுற்று சூழல் சான்று பெறுதல் ஆகியவையாகும். இது விரைவில் மாறும்.தமிழகத்தில் தொழில் துறை மிகவும் சிறப்பாக உள்ளது. தமிழக தொழில் துறை முதலீட்டாளர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.முதலீட்டாளர்களை தமிழக அரசு ரத்தன கம்பலம் விரித்து வரவேற்றுவருகிறது.தமிழக தொழில் துறையில் பின்னடைவு இல்லை என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.