ETV Bharat / state

என் மார்பை பிளந்து பார்த்தால் கலைஞர் தான் இருப்பார்...வைகோ உருக்கம்...

author img

By

Published : Aug 29, 2022, 11:12 AM IST

நெல்லையில் தனது ஓட்டுனரின் இல்ல திருமணவிழாவில் பங்கேற்றா வைகோ, நான் ஏற்றுக்கொண்ட தலைவனுக்காக என் உயிரையும் கொடுக்க தயாராக இருந்தேன். உயிரை கொடு என்று கலைஞர் கேட்டிருந்தால் அந்த நேரமே எனது மார்பை வாளால் கீறி உயிரை கொடுக்க தயாராக இருந்தேன். காரணம் என் மார்பை பிளந்து பார்த்தால் அதில் கலைஞர் தான் இருப்பார் என்று உருக்கமாக பேசினார்.

என் மார்பை பிளந்து பார்த்தால் கலைஞர் தான் இருந்தார்...வைகோ உருக்கமான பேச்சு
என் மார்பை பிளந்து பார்த்தால் கலைஞர் தான் இருந்தார்...வைகோ உருக்கமான பேச்சு

திருநெல்வேலி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் நடைபெற்ற தனது ஓட்டுனர் சாரதி பி.சி.துரை என்பவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், "ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்படாமல் இருந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர் படை பயிற்சிக்கு எம்ஜிஆர் தடை விதித்தார்.

முன்னாள் ராணுவ வீரர்கள் மூலம் தொண்டர் படையில் பயிற்சி அளிக்கப்பட்டது. தொண்டர் படைக்கு போலீஸ் கடும் கெடுபிடி விதித்தது. திமுகவின் தொண்டர் படை வீரர்கள் தற்போது அணிந்திருக்கும் கருப்பு சிவப்பு உடை என்னால் வடிவமைக்கப்பட்டது. நான் ஏற்றுக்கொண்ட தலைவனுக்காக என் உயிரையும் கொடுக்க தயாராக இருந்தேன். உயிரை கொடு என கலைஞர் கேட்டிருந்தால் அந்த நேரமே எனது மார்பை வாளால் கீறி உயிரை கொடுக்க தயாராக இருந்தேன். காரணம் என் மார்பை பிளந்து பார்த்தால் அதில் கலைஞர் தான் இருப்பார். இது நான் திமுகவில் இருந்து வெளியேற்றுவதற்கு முன்பு நடந்தது.

என் மார்பை பிளந்து பார்த்தால் கலைஞர் தான் இருப்பார்...வைகோ உருக்கம்...

நான் நேசிக்கும் மிகப்பெரிய தலைவர் பிரபாகரன். எனக்கு கல்யாணம் நடந்த போது என் மனைவியை நான் ஏறெடுத்து பார்க்கவில்லை.
இப்போது அனைத்தும் மாறிவிட்டது. திருமணம் நிச்சயக்கப்பட்ட உடனேயே மணமக்கள் தங்களது தொலைபேசி எண்களை பரிமாறிக் கொள்கிறார்கள். பல மணி நேரம் தொலைபேசியில் பேசிக் கொள்கிறார்கள்.

தற்போது நாளிதழ்களில் கணவன் மனைவியை வெட்டி கொன்றார், மனைவி கணவனை கடத்தி கொன்றார் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது திருமண வாழ்க்கை கசந்து விட்டது. இலக்கியங்களில் மணமக்கள் எப்படி வாழ வேண்டும் என்று எவ்வளவோ உதாரணங்கள் இருக்கின்றன அப்படித்தான் வாழ வேண்டும் அப்படி நீங்கள் வாழ வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: இந்தியாவில் சுசூகியின் வெற்றி இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான கூட்டுறவைக் குறிக்கிறது

திருநெல்வேலி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் நடைபெற்ற தனது ஓட்டுனர் சாரதி பி.சி.துரை என்பவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், "ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்படாமல் இருந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர் படை பயிற்சிக்கு எம்ஜிஆர் தடை விதித்தார்.

முன்னாள் ராணுவ வீரர்கள் மூலம் தொண்டர் படையில் பயிற்சி அளிக்கப்பட்டது. தொண்டர் படைக்கு போலீஸ் கடும் கெடுபிடி விதித்தது. திமுகவின் தொண்டர் படை வீரர்கள் தற்போது அணிந்திருக்கும் கருப்பு சிவப்பு உடை என்னால் வடிவமைக்கப்பட்டது. நான் ஏற்றுக்கொண்ட தலைவனுக்காக என் உயிரையும் கொடுக்க தயாராக இருந்தேன். உயிரை கொடு என கலைஞர் கேட்டிருந்தால் அந்த நேரமே எனது மார்பை வாளால் கீறி உயிரை கொடுக்க தயாராக இருந்தேன். காரணம் என் மார்பை பிளந்து பார்த்தால் அதில் கலைஞர் தான் இருப்பார். இது நான் திமுகவில் இருந்து வெளியேற்றுவதற்கு முன்பு நடந்தது.

என் மார்பை பிளந்து பார்த்தால் கலைஞர் தான் இருப்பார்...வைகோ உருக்கம்...

நான் நேசிக்கும் மிகப்பெரிய தலைவர் பிரபாகரன். எனக்கு கல்யாணம் நடந்த போது என் மனைவியை நான் ஏறெடுத்து பார்க்கவில்லை.
இப்போது அனைத்தும் மாறிவிட்டது. திருமணம் நிச்சயக்கப்பட்ட உடனேயே மணமக்கள் தங்களது தொலைபேசி எண்களை பரிமாறிக் கொள்கிறார்கள். பல மணி நேரம் தொலைபேசியில் பேசிக் கொள்கிறார்கள்.

தற்போது நாளிதழ்களில் கணவன் மனைவியை வெட்டி கொன்றார், மனைவி கணவனை கடத்தி கொன்றார் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது திருமண வாழ்க்கை கசந்து விட்டது. இலக்கியங்களில் மணமக்கள் எப்படி வாழ வேண்டும் என்று எவ்வளவோ உதாரணங்கள் இருக்கின்றன அப்படித்தான் வாழ வேண்டும் அப்படி நீங்கள் வாழ வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: இந்தியாவில் சுசூகியின் வெற்றி இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான கூட்டுறவைக் குறிக்கிறது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.