ETV Bharat / state

ஒன்று திரண்ட விவசாயிகள்... இழுத்து பூட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகம்...

author img

By

Published : Oct 17, 2022, 4:51 PM IST

திருநெல்வேலியில் நதிநீர் இணைப்பு திட்டத்தின் சோதனை ஓட்டத்திற்கு எதிராக கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat

திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றில் இருந்து கடலில் உபரியாக கலக்கும் 13 ஆயிரத்து 758 மில்லியன் கனஅடி வெள்ள நீரில் கண்ணடியன் அணைக்கட்டில் இருந்து 2ஆயிரத்து 765 மில்லியன் கனஅடி நீரை கருமேனியாறு, நம்பியாறு மற்றும் தாமிரபரணி நதிகளுடன் இணைக்க திட்டமிடப்பட்டது.

நான்கு அலகுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து பணிகளும் வருகிற 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி - கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் வெள்ளநீர் கால்வாய் பணிக்காக பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தில் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவ்வாறு மழை பெய்து வெள்ளநீர் ஏற்பட்டால் 1300 கனஅடி தண்ணீர் தற்காலிகமாக சோதனை ஓட்டமாக இந்த வெள்ள நீர் கால்வாயில் செல்வதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாபநாசம் அணையில் இருந்து ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் சோதனை ஓட்டமாக வெள்ள நீர் கால்வாய் பணிகளுக்காக திறந்து விடப்பட இருப்பதாகவும் சபாநாயகர் அப்பாவு தான் இந்த பணிகளை முன்னெடுப்பதாகவும் கூறி கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சோதனை ஓட்டத்தால் அணை காலியாகிவிடும்.. கவலை தெரிவித்த விவசாயிகள்..

இதுக்கிடையில் விவசாயிகள் மனு அளிப்பதற்காக ஆட்சியர் அலுவலகம் உள்ளே நுழைந்தபோது காவல் துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குறிப்பிட்ட சிலரை மட்டுமே ஆட்சியரை சந்திக்க அனுமதிக்க முடியும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து கடும் வாக்குவாதத்துக்கு பிறகு சுமார் பத்து விவசாயிகள் மட்டும் உள்ளே சென்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து கண்ணாடியின் கால்வய் பாசன விவசாய சங்க செயலாளர் கண்ணப்ப நயினார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பாபநாசம் அணைக்கட்டில் தற்போது 82 அடி தான் தண்ணீர் இருக்கிறது. இந்த நிலையில் 75 கி.மீ., தூரத்திற்கு தண்ணீரை சோதனைக்காக எடுக்கும்போது அணைக்கட்டில் சுத்தமாக தண்ணீர் இல்லாமல் சென்று விடும்.

மேலும், பிசான சாகுபடிக்காக காத்திருக்கும் கன்னடியான், கோடை மேலழகியான், நதி யுண்ணி மற்றும் தாமிரபரணி ஆற்று படுக்கையில் உள்ள மற்ற பிற கால்வாய் பாசன பகுதி விவசாயிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, சோதனை ஓட்டத்திற்காக ஒரு சொட்டு தண்ணீர் கூட எடுக்க விடமாட்டோம்” என்றார்.

இதையும் படிங்க: தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை? - கோரிக்கை விடுக்கும் ஆசிரியர்கள்..

திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றில் இருந்து கடலில் உபரியாக கலக்கும் 13 ஆயிரத்து 758 மில்லியன் கனஅடி வெள்ள நீரில் கண்ணடியன் அணைக்கட்டில் இருந்து 2ஆயிரத்து 765 மில்லியன் கனஅடி நீரை கருமேனியாறு, நம்பியாறு மற்றும் தாமிரபரணி நதிகளுடன் இணைக்க திட்டமிடப்பட்டது.

நான்கு அலகுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து பணிகளும் வருகிற 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி - கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் வெள்ளநீர் கால்வாய் பணிக்காக பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தில் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவ்வாறு மழை பெய்து வெள்ளநீர் ஏற்பட்டால் 1300 கனஅடி தண்ணீர் தற்காலிகமாக சோதனை ஓட்டமாக இந்த வெள்ள நீர் கால்வாயில் செல்வதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாபநாசம் அணையில் இருந்து ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் சோதனை ஓட்டமாக வெள்ள நீர் கால்வாய் பணிகளுக்காக திறந்து விடப்பட இருப்பதாகவும் சபாநாயகர் அப்பாவு தான் இந்த பணிகளை முன்னெடுப்பதாகவும் கூறி கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சோதனை ஓட்டத்தால் அணை காலியாகிவிடும்.. கவலை தெரிவித்த விவசாயிகள்..

இதுக்கிடையில் விவசாயிகள் மனு அளிப்பதற்காக ஆட்சியர் அலுவலகம் உள்ளே நுழைந்தபோது காவல் துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குறிப்பிட்ட சிலரை மட்டுமே ஆட்சியரை சந்திக்க அனுமதிக்க முடியும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து கடும் வாக்குவாதத்துக்கு பிறகு சுமார் பத்து விவசாயிகள் மட்டும் உள்ளே சென்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து கண்ணாடியின் கால்வய் பாசன விவசாய சங்க செயலாளர் கண்ணப்ப நயினார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பாபநாசம் அணைக்கட்டில் தற்போது 82 அடி தான் தண்ணீர் இருக்கிறது. இந்த நிலையில் 75 கி.மீ., தூரத்திற்கு தண்ணீரை சோதனைக்காக எடுக்கும்போது அணைக்கட்டில் சுத்தமாக தண்ணீர் இல்லாமல் சென்று விடும்.

மேலும், பிசான சாகுபடிக்காக காத்திருக்கும் கன்னடியான், கோடை மேலழகியான், நதி யுண்ணி மற்றும் தாமிரபரணி ஆற்று படுக்கையில் உள்ள மற்ற பிற கால்வாய் பாசன பகுதி விவசாயிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, சோதனை ஓட்டத்திற்காக ஒரு சொட்டு தண்ணீர் கூட எடுக்க விடமாட்டோம்” என்றார்.

இதையும் படிங்க: தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை? - கோரிக்கை விடுக்கும் ஆசிரியர்கள்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.