ETV Bharat / state

மேகதாதுவில் நிச்சயம் அணை கட்ட முடியாது - பொன்.ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Aug 1, 2021, 3:38 PM IST

மேகதாதுவில் கர்நாடகா அரசால் அணை கட்ட முடியாது எனவும், அதனை அனுமதிக்க மாட்டோம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

திருநெல்வேலி : முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது "நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வரவேற்பும் எதிர்ப்பும் இருந்து வரும் நிலையில், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீட்டை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்".

மாணவர்களுக்கு பலன்

"இதன் மூலம் சரித்திரத்தில் மிக முக்கிய காலக்கட்டத்தை பிரதமர் எட்டியுள்ளார். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தபடும் என பிரதமர் தெரிவித்துள்ளார் இந்த இரண்டு விஷயமும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு மிக பெரிய வரப்பிரசாதம் ஆகும்".

"நீட் தேர்வு பின்னணியை பார்த்தால் ஆரம்பத்தில் அது கொண்டு வரப்பட்டபோது மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தநு. திமுக உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசில் அங்கம் வகித்தன".

திமுக துரோகம்

" உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின்படி இந்த இரண்டு ஒதுக்கீடுகளும் எஸ்சி எஸ்டி ஒதுக்கிட்டில் நடைமுறைபடுத்தபடுகிறது. ஆனால் 27% கொடுக்க வேண்டிய இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கொடுக்கவிலலை. ஏன் அந்த நேரத்தில் திமுக இதை கேட்கவில்லை. இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மாபெரும் துரோகத்தை திமுக செய்துள்ளது".

"அப்போதே நடைமுறைப்படுத்தியிருந்தால் ஏராளமான மாணவர்கள் மருத்துவராக ஆகி இருப்பார்கள். ஆனால் இதனை திமுக திட்டமிட்டு நிறுத்தி வைத்தது".

"அப்போது மத்திய அரசில் 6 திமுக அமைச்சர்கள் இருந்தும் ஏன் வாய் திறக்கவில்லலை. 2010ல் கருணாநிதி முதல்வராகவும், எம்ஆர்கே.பன்னீர்செல்வம் சுகாதார அமைச்சராகவும் இருந்தனர் அப்போது எது அவர்களை தடுத்தது? கருணாநிதியின் ஒரு சுட்டு விரல் அசைவுக்கு மத்திய அரசு தலை வணங்கும் என்று சோனியா சொன்னார். அவ்வளவு சக்தி படைத்த நீங்கள், ஏன் இந்த ஓபிசி மாணவர்கள் பற்றி கவலைப்படாமல் இருந்தீரக்ள்? இன்று நீட் பற்றி பேச திமுகவுக்கும் காங்கிரசுக்கும் எந்தவித அருகதையும் இல்லை".

நீட் தேர்வு

"நீட் தேர்வை ஒழிப்பதாக சொன்னார்கள் தற்போது இந்த ஆண்டு அடுத்த ஆண்டு என தள்ளி போடுகிறார்கள். தமிழக மாணவர்களை கெடுக்காதீர்கள். அவர்கள் வாழ்க்கையில் மண்வாரி தூற்ற கூடிய வேலையை திமுக காங்கிரஸ் செய்யக் கூடாது".

"2014 வரை நாடு முழுவதும் அரசு மருத்து கல்லூரிகள் எண்ணிக்கை வெறும் 189 ஆக இருந்த்து 2014க்கு பிறகு ஆறு ஆண்டுகளில் 289 ஆக மாறியுள்ளது. 2014 வலை 215 ஆக இருந்த தனியார் கல்லூரிகளின் எண்ணிக்கை 2014க்கு பிறகு 269 ஆக அதிகரித்துள்ளது".

மாணவர் சேர்க்கை

"மாணவர் எண்ணிக்கை பொறுத்தவரை எம்பிபிஎஸ்சில் ஆண்டுதோறும் 2014 வரை 54,348 ஆக இருந்த்து. 2014க்கு பிறகு 84,649 ஆக அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய வித்தியாசம். மாணவர்கள் எண்ணிக்கையை 56 % பிரதமர் உயர்த்தி காட்டியுள்ளார் அதேபோல் முதுகலை மாணவர்கள் எண்ணிக்கை 2014க்கு பிறகு 80% உயர்ந்துள்ளது".

"தமிழ்நாட்டில் 2019ல் நீட் தேர்வு எழுதி தகுதி பெற்றவர்கள் 48.57% பேர். 2020ல் 57.44 % மாணவர்கள் தகுதி பெற்றார்கள். ஒரு ஆண்டில் 10% அதிகமாகியுள்ளது. கிராம புற மாணவர்கள் நலனுக்காக அதிமுக அரசு 7.5% இட ஒதுக்கீடு கொடுத்துள்ளது".

வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக

"வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அல்வா கொடுக்கிறது. திமுகவின் 68 வாக்குறுதிகளில் ஒன்று கடல் பாசியில் அல்வா தயாரிப்பது. அதை நிறைவேற்றாமல் கோடான கோடி மக்களுக்கு அல்வா கொடுத்து வருகிறது. திருநெல்வேலி அல்வா எல்லாம் திமுகவிடம் தோற்று விடும். நீட் தேர்வை மத்திய அரசு கொண்டுவரவில்லை. உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்படி தான் நீட் கொண்டுவரப்பட்டது. சட்டசபையை நாடகம் ஆடுவதற்காக திமுக பயன்படுத்தி வருகிறது" என்று பொன்ராதாகிருஷ்ணன் கூறினார்.

அனை கட்ட முடியாது

நீட் விவகாரத்தில் திமுக மாணவர்களை குழப்புவதாக கூறுகிறீர்கள், ஆனால் மேகதாது விவகாரத்தில் பாஜக மக்களை குழப்புகிறதே என்று கேட்டபோது, மேகதாது விவகாரத்தின் பின்னணியிலும் திமுக தான் மிகப்பெரிய நாடகம் நடத்துவதாகவும், மேகதாதுவில் கர்நாடகாவால் அணை கட்ட முடியாது என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதையும் படிங்க : கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கரோனா சான்று கட்டாயம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திருநெல்வேலி : முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது "நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வரவேற்பும் எதிர்ப்பும் இருந்து வரும் நிலையில், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீட்டை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்".

மாணவர்களுக்கு பலன்

"இதன் மூலம் சரித்திரத்தில் மிக முக்கிய காலக்கட்டத்தை பிரதமர் எட்டியுள்ளார். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தபடும் என பிரதமர் தெரிவித்துள்ளார் இந்த இரண்டு விஷயமும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு மிக பெரிய வரப்பிரசாதம் ஆகும்".

"நீட் தேர்வு பின்னணியை பார்த்தால் ஆரம்பத்தில் அது கொண்டு வரப்பட்டபோது மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தநு. திமுக உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசில் அங்கம் வகித்தன".

திமுக துரோகம்

" உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின்படி இந்த இரண்டு ஒதுக்கீடுகளும் எஸ்சி எஸ்டி ஒதுக்கிட்டில் நடைமுறைபடுத்தபடுகிறது. ஆனால் 27% கொடுக்க வேண்டிய இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கொடுக்கவிலலை. ஏன் அந்த நேரத்தில் திமுக இதை கேட்கவில்லை. இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மாபெரும் துரோகத்தை திமுக செய்துள்ளது".

"அப்போதே நடைமுறைப்படுத்தியிருந்தால் ஏராளமான மாணவர்கள் மருத்துவராக ஆகி இருப்பார்கள். ஆனால் இதனை திமுக திட்டமிட்டு நிறுத்தி வைத்தது".

"அப்போது மத்திய அரசில் 6 திமுக அமைச்சர்கள் இருந்தும் ஏன் வாய் திறக்கவில்லலை. 2010ல் கருணாநிதி முதல்வராகவும், எம்ஆர்கே.பன்னீர்செல்வம் சுகாதார அமைச்சராகவும் இருந்தனர் அப்போது எது அவர்களை தடுத்தது? கருணாநிதியின் ஒரு சுட்டு விரல் அசைவுக்கு மத்திய அரசு தலை வணங்கும் என்று சோனியா சொன்னார். அவ்வளவு சக்தி படைத்த நீங்கள், ஏன் இந்த ஓபிசி மாணவர்கள் பற்றி கவலைப்படாமல் இருந்தீரக்ள்? இன்று நீட் பற்றி பேச திமுகவுக்கும் காங்கிரசுக்கும் எந்தவித அருகதையும் இல்லை".

நீட் தேர்வு

"நீட் தேர்வை ஒழிப்பதாக சொன்னார்கள் தற்போது இந்த ஆண்டு அடுத்த ஆண்டு என தள்ளி போடுகிறார்கள். தமிழக மாணவர்களை கெடுக்காதீர்கள். அவர்கள் வாழ்க்கையில் மண்வாரி தூற்ற கூடிய வேலையை திமுக காங்கிரஸ் செய்யக் கூடாது".

"2014 வரை நாடு முழுவதும் அரசு மருத்து கல்லூரிகள் எண்ணிக்கை வெறும் 189 ஆக இருந்த்து 2014க்கு பிறகு ஆறு ஆண்டுகளில் 289 ஆக மாறியுள்ளது. 2014 வலை 215 ஆக இருந்த தனியார் கல்லூரிகளின் எண்ணிக்கை 2014க்கு பிறகு 269 ஆக அதிகரித்துள்ளது".

மாணவர் சேர்க்கை

"மாணவர் எண்ணிக்கை பொறுத்தவரை எம்பிபிஎஸ்சில் ஆண்டுதோறும் 2014 வரை 54,348 ஆக இருந்த்து. 2014க்கு பிறகு 84,649 ஆக அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய வித்தியாசம். மாணவர்கள் எண்ணிக்கையை 56 % பிரதமர் உயர்த்தி காட்டியுள்ளார் அதேபோல் முதுகலை மாணவர்கள் எண்ணிக்கை 2014க்கு பிறகு 80% உயர்ந்துள்ளது".

"தமிழ்நாட்டில் 2019ல் நீட் தேர்வு எழுதி தகுதி பெற்றவர்கள் 48.57% பேர். 2020ல் 57.44 % மாணவர்கள் தகுதி பெற்றார்கள். ஒரு ஆண்டில் 10% அதிகமாகியுள்ளது. கிராம புற மாணவர்கள் நலனுக்காக அதிமுக அரசு 7.5% இட ஒதுக்கீடு கொடுத்துள்ளது".

வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக

"வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அல்வா கொடுக்கிறது. திமுகவின் 68 வாக்குறுதிகளில் ஒன்று கடல் பாசியில் அல்வா தயாரிப்பது. அதை நிறைவேற்றாமல் கோடான கோடி மக்களுக்கு அல்வா கொடுத்து வருகிறது. திருநெல்வேலி அல்வா எல்லாம் திமுகவிடம் தோற்று விடும். நீட் தேர்வை மத்திய அரசு கொண்டுவரவில்லை. உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்படி தான் நீட் கொண்டுவரப்பட்டது. சட்டசபையை நாடகம் ஆடுவதற்காக திமுக பயன்படுத்தி வருகிறது" என்று பொன்ராதாகிருஷ்ணன் கூறினார்.

அனை கட்ட முடியாது

நீட் விவகாரத்தில் திமுக மாணவர்களை குழப்புவதாக கூறுகிறீர்கள், ஆனால் மேகதாது விவகாரத்தில் பாஜக மக்களை குழப்புகிறதே என்று கேட்டபோது, மேகதாது விவகாரத்தின் பின்னணியிலும் திமுக தான் மிகப்பெரிய நாடகம் நடத்துவதாகவும், மேகதாதுவில் கர்நாடகாவால் அணை கட்ட முடியாது என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதையும் படிங்க : கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கரோனா சான்று கட்டாயம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.