ETV Bharat / state

பெண்களின் முன்னேற்றத்தில் திமுக ஆற்றிய பங்கு என்ன? - ஸ்டாலின் விளக்கம்

author img

By

Published : Oct 15, 2019, 10:23 PM IST

Updated : Oct 16, 2019, 12:58 AM IST

நெல்லை: பெண்களின் முன்னேற்றத்திற்கு ஏராளமான திட்டங்களை தந்தது திமுகதான் என அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK Stalin

நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். கடம்போடுவாழ்வு என்ற கிராமத்தில் திண்ணைப் பரப்புரையில் அவர் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "பெண்களின் முன்னேற்றத்திற்கு ஏராளமான திட்டங்களை தந்தது திமுகதான். சொத்தில் சம உரிமை, பெண்களுக்கு திருமண உதவித்தொகை, விதவைகள் மறுவாழ்வு உதவித்தொகை, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு என அடுக்கடுக்கான திட்டங்கள் தந்துள்ளோம்.

பெண்கள் முன்னேற்றத்திற்காக திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழு தொடங்கப்பட்டது. சிறு குறு தொழில் தொடங்க ஏராளமான நிதி உதவி வழங்கப்பட்டது. எட்டாண்டு கால அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் எதுவும் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு உங்களின் குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படும்" என்றார்.

நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். கடம்போடுவாழ்வு என்ற கிராமத்தில் திண்ணைப் பரப்புரையில் அவர் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "பெண்களின் முன்னேற்றத்திற்கு ஏராளமான திட்டங்களை தந்தது திமுகதான். சொத்தில் சம உரிமை, பெண்களுக்கு திருமண உதவித்தொகை, விதவைகள் மறுவாழ்வு உதவித்தொகை, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு என அடுக்கடுக்கான திட்டங்கள் தந்துள்ளோம்.

பெண்கள் முன்னேற்றத்திற்காக திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழு தொடங்கப்பட்டது. சிறு குறு தொழில் தொடங்க ஏராளமான நிதி உதவி வழங்கப்பட்டது. எட்டாண்டு கால அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் எதுவும் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு உங்களின் குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படும்" என்றார்.

Intro:பெண்கள் முன்னேற்றத்திற்கும் அவர்கள் சொந்தகாலில் நிற்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு திமுக ஆட்சிகாலத்தில் கலைஞர் அவர்களால் முதன்முதலில் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டது என்றும் சிறு குறு தொழில் தொடங்க ஏராளமான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி கடம்போடுவாழ்வு கிராமத்தில் திண்ணைபிரச்சாரத்தின் போது பெண்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.Body:பெண்கள் முன்னேற்றத்திற்கும் அவர்கள் சொந்தகாலில் நிற்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு திமுக ஆட்சிகாலத்தில் கலைஞர் அவர்களால் முதன்முதலில் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டது என்றும் சிறு குறு தொழில் தொடங்க ஏராளமான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி கடம்போடுவாழ்வு கிராமத்தில் திண்ணைபிரச்சாரத்தின் போது பெண்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.


நாங்குநேரி இடைத்தேலை முன்னிட்டு இரண்டாவது முறையாக நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக மு.க.ஸ்டாலின் வந்திருந்தார், இன்று காலை கடம்போடுவாழ்வு என்ற கிராமத்தில் திண்ணைபிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பெண்கள் மத்தியில் பேசும் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு ஏராளமான திட்டங்களை தந்தது திமுகதான் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, பெண்களுக்கு திருமண உதவித்தொகை விதவைகள் மறுவாழ்வு உதவித்தொகை , உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என அடுக்கடுக்கான திட்டங்கள் தந்துள்ளோம் நடைபெறுகின்ற இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு நல்ல வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது அதிமுக ஆட்சி நூற்றாண்டு காலத்தில் இதுவரை எந்தவிதமான நிதியும் வழங்க வில்லை பெண்கள் முன்னேற்றத்திற்கும் அவர்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழு தொடங்கப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு சிறு குறு தொழில் தொடங்க ஏராளமான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. எட்டாண்டு கால அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த சாலை வசதி குடிநீர் வசதி என பல்வேறு அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படாமல் உள்ளது இதனால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் எதுவும் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

விரைவில் திமுக ஆட்சி வரப்போகிறது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு உங்களின் குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படும் எனவே நடைபெற இருக்கின்ற நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்கள் கை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்செய்யுங்கள் என்று கூறினார்.Conclusion:
Last Updated : Oct 16, 2019, 12:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.