ETV Bharat / state

தீபாவளி விற்பனை - ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை! - அண்டை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் வருகை

நெல்லை அருகே மேலப்பாளையம் கால்நடை சந்தையில் நெல்லை மட்டுமல்லாமல் தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற அண்டை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய ஆடுகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.

நெருங்கும் தீபாவளி:ஒரே நாளில் நெல்லையில் ரூ.4 கோடி வரை ஆடுகள் விற்பனை!
நெருங்கும் தீபாவளி:ஒரே நாளில் நெல்லையில் ரூ.4 கோடி வரை ஆடுகள் விற்பனை!
author img

By

Published : Oct 18, 2022, 6:21 PM IST

திருநெல்வேலி: மாநகர பகுதியில் உள்ள மேலப்பாளையம் கால்நடை சந்தை மாவட்டத்தின் புகழ்பெற்ற சந்தையாகும் இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த சந்தை நடைபெறும். இங்கு நெல்லை மட்டுமல்லாமல் தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற அண்டை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் தங்களுடைய ஆடுகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் இன்று(அக்.18) கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளி பண்டிகை வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்றைய தினம் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் புத்தாடைகள் உடுத்தி அசைவ உணவுகள் சமைத்து உற்சாகமாக பண்டிகையை கொண்டாடுவார்கள்.

எனவே இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆடுகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. சிறிய குட்டி ஆடு ரூ.3000 முதல் பெரிய ஆடு ரூ.45000 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் இறைச்சி கடை வியாபாரிகள் இன்று காலையிலிருந்து இந்த கால்நடை சந்தையில் குவிந்துள்ளனர்.

அவர்கள் தங்களுக்கு தேவையான கால்நடைகளை வாங்கி வருகிறார்கள் இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.4 கோடி வரை விற்பனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆடுகளை விற்பனை செய்ய வந்த விவசாயிகள் கூறும் போது இந்த ஆண்டு அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளதால் ஆடுகளை மிக குறைந்த விலைக்கு இறைச்சி கடைக்காரர்கள் கேட்கிறார்கள் நாங்கள் காலையிலேயே இங்கு வந்து விட்டோம்.இதுவரை ஆடுகள் விற்பனை செய்யாமல் இங்கே நிற்கிறோம் என தெரிவித்தனர்.

ஆடுகளை வாங்க வந்தவர்கள் கூறும்போது இந்த ஆண்டு ஆடு விற்பனை அமோகமாக உள்ளது. என தெரிவித்தனர். இதேபோல் மேலப்பாளையத்தில் பல்வேறு பகுதிகளிலும் நாட்டுக்கோழி, வாத்து உள்ளிட்ட விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது.

நெருங்கும் தீபாவளி:ஒரே நாளில் நெல்லையில் ரூ.4 கோடி வரை ஆடுகள் விற்பனை!

இதையும் படிங்க:இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 8 மீனவர்கள் மீட்பு; விமானம் மூலம் தமிழகம் வருகை

திருநெல்வேலி: மாநகர பகுதியில் உள்ள மேலப்பாளையம் கால்நடை சந்தை மாவட்டத்தின் புகழ்பெற்ற சந்தையாகும் இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த சந்தை நடைபெறும். இங்கு நெல்லை மட்டுமல்லாமல் தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற அண்டை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் தங்களுடைய ஆடுகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் இன்று(அக்.18) கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளி பண்டிகை வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்றைய தினம் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் புத்தாடைகள் உடுத்தி அசைவ உணவுகள் சமைத்து உற்சாகமாக பண்டிகையை கொண்டாடுவார்கள்.

எனவே இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆடுகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. சிறிய குட்டி ஆடு ரூ.3000 முதல் பெரிய ஆடு ரூ.45000 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் இறைச்சி கடை வியாபாரிகள் இன்று காலையிலிருந்து இந்த கால்நடை சந்தையில் குவிந்துள்ளனர்.

அவர்கள் தங்களுக்கு தேவையான கால்நடைகளை வாங்கி வருகிறார்கள் இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.4 கோடி வரை விற்பனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆடுகளை விற்பனை செய்ய வந்த விவசாயிகள் கூறும் போது இந்த ஆண்டு அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளதால் ஆடுகளை மிக குறைந்த விலைக்கு இறைச்சி கடைக்காரர்கள் கேட்கிறார்கள் நாங்கள் காலையிலேயே இங்கு வந்து விட்டோம்.இதுவரை ஆடுகள் விற்பனை செய்யாமல் இங்கே நிற்கிறோம் என தெரிவித்தனர்.

ஆடுகளை வாங்க வந்தவர்கள் கூறும்போது இந்த ஆண்டு ஆடு விற்பனை அமோகமாக உள்ளது. என தெரிவித்தனர். இதேபோல் மேலப்பாளையத்தில் பல்வேறு பகுதிகளிலும் நாட்டுக்கோழி, வாத்து உள்ளிட்ட விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது.

நெருங்கும் தீபாவளி:ஒரே நாளில் நெல்லையில் ரூ.4 கோடி வரை ஆடுகள் விற்பனை!

இதையும் படிங்க:இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 8 மீனவர்கள் மீட்பு; விமானம் மூலம் தமிழகம் வருகை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.