ETV Bharat / state

தேனியில் கஞ்சா விற்ற இளைஞர் கைது

author img

By

Published : Mar 2, 2020, 10:11 PM IST

பெரியகுளம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்ற இளைஞரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து ஐந்து கிலோ அளவிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.

youth-arrested-for-selling-cannabis
youth-arrested-for-selling-cannabis

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேவுள்ள கைலாசபட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் தீவிர ரோந்து காவல்துறையினர் பணியில் ஈடுபட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா.

அப்போது கைலாசநாதார் கோவிலுக்குச் செல்லும் சாலையில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இளைஞர் சிவதேசிங்கிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும், விற்பனைக்காக அவர் வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூவர் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேவுள்ள கைலாசபட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் தீவிர ரோந்து காவல்துறையினர் பணியில் ஈடுபட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா.

அப்போது கைலாசநாதார் கோவிலுக்குச் செல்லும் சாலையில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இளைஞர் சிவதேசிங்கிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும், விற்பனைக்காக அவர் வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.