ETV Bharat / state

அரிக் கொம்பன் யானை மீது டிரோன் - இளைஞர் கைது

அரி கொம்பன் யானையை படம் பிடிப்பதற்காக ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு சின்னமனூரைச் சேர்ந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

author img

By

Published : May 27, 2023, 7:51 PM IST

Updated : May 27, 2023, 7:58 PM IST

Etv Bharat
Etv Bharat

தேனி: கம்பம் பகுதிக்குள் புகுந்த அரிசி கொம்பன் யானை அட்டூலியம் செய்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களை விரட்டியது. இந்நிலையில் யானையை விரட்டும் முயற்சியில் தமிழ்நாடு - கேரள வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தி ஆக்ரோஷத்துடன் பொதுமக்களை விரட்டியது. பின்னர் வனத்துறையினர், காவல் துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியை மேற்கொண்டனர். இதனால், கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரி கொம்பன் அருகில் இருந்த காந்திநகர் காலனி அருகே உள்ள வாழை தோப்பில் புகுந்த அந்த பகுதியிலேயே தஞ்சம் அடைந்தது. தோப்பில் தஞ்சம் அடைந்த யானை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, அருகே பறந்த ட்ரோன் கேமராவால் யானை அங்கிருந்து வேறு பகுதிக்குச் சென்றது.

இந்நிலையில் அனுமதி இன்றி ட்ரோன் இயக்கிய சின்னமனூரைச் சேர்ந்த ஹரி என்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது கூடலூர் சாலை பகுதியில் அரி கொம்பன் உலா வருவதால் அந்த பகுதியில் யாரும் செல்லாமல் காவல் துறையினர் பாதுகாத்து வருகின்றனர். மேலும், யானையின் நடவடிக்கைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஊருக்குள் புகுந்து அரிசிகொம்பன் அட்டகாசம்... பொது மக்களை விரட்டும் வீடியோ.. யானையை விரட்ட வனத்துறை போராட்டம்!

கேரள மாநிலம் மூணாறு சின்னக்கல் பகுதியில் அட்டகாசம் செய்துவந்த அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர், 4 கும்கி யானைகள் உதவிகளுடன் தமிழ்நாடு - கேரளா எல்லையிலுள்ள பெரியார் புலிகள் வன சரணாலயத்தில் கொண்டுபோய் விட்டனர்.

அங்கிருந்து தமிழ்நாடு வனப்பகுதிக்குள் நுழைந்த யானை ஹவேலிஸ் மேகமலை பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்தது. தொடர்ந்து, அங்கிருந்து நேற்று இரவு குமுளி ரோஜா பூ கண்டம் வழியாக லோயர் கேம்ப் பகுதிக்கு இடம் பெயர்ந்தது.

பின்னர், அங்கிருந்து கூடலூர் அருகேவுள்ள கழுதை மேட்டில் சுற்றித் திரிந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை 4 மணியளவில் அரி கொம்பன் அங்கிருந்து கூடலூர் வழியாக கம்பம் பகுதிக்குள் நுழைந்தது. அங்கிருந்த விளைநிலங்களை சேதப்படுத்தியதோடு பொதுமக்களையும் விரட்டியது. இந்நிலையில், அரி கொம்பனை பிடிக்கும் முயற்ச்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அரிசி கொம்பனால் கம்பத்தில் 144 தடை... பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்ட 2 கும்கிகள்...

தேனி: கம்பம் பகுதிக்குள் புகுந்த அரிசி கொம்பன் யானை அட்டூலியம் செய்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களை விரட்டியது. இந்நிலையில் யானையை விரட்டும் முயற்சியில் தமிழ்நாடு - கேரள வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தி ஆக்ரோஷத்துடன் பொதுமக்களை விரட்டியது. பின்னர் வனத்துறையினர், காவல் துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியை மேற்கொண்டனர். இதனால், கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரி கொம்பன் அருகில் இருந்த காந்திநகர் காலனி அருகே உள்ள வாழை தோப்பில் புகுந்த அந்த பகுதியிலேயே தஞ்சம் அடைந்தது. தோப்பில் தஞ்சம் அடைந்த யானை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, அருகே பறந்த ட்ரோன் கேமராவால் யானை அங்கிருந்து வேறு பகுதிக்குச் சென்றது.

இந்நிலையில் அனுமதி இன்றி ட்ரோன் இயக்கிய சின்னமனூரைச் சேர்ந்த ஹரி என்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது கூடலூர் சாலை பகுதியில் அரி கொம்பன் உலா வருவதால் அந்த பகுதியில் யாரும் செல்லாமல் காவல் துறையினர் பாதுகாத்து வருகின்றனர். மேலும், யானையின் நடவடிக்கைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஊருக்குள் புகுந்து அரிசிகொம்பன் அட்டகாசம்... பொது மக்களை விரட்டும் வீடியோ.. யானையை விரட்ட வனத்துறை போராட்டம்!

கேரள மாநிலம் மூணாறு சின்னக்கல் பகுதியில் அட்டகாசம் செய்துவந்த அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர், 4 கும்கி யானைகள் உதவிகளுடன் தமிழ்நாடு - கேரளா எல்லையிலுள்ள பெரியார் புலிகள் வன சரணாலயத்தில் கொண்டுபோய் விட்டனர்.

அங்கிருந்து தமிழ்நாடு வனப்பகுதிக்குள் நுழைந்த யானை ஹவேலிஸ் மேகமலை பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்தது. தொடர்ந்து, அங்கிருந்து நேற்று இரவு குமுளி ரோஜா பூ கண்டம் வழியாக லோயர் கேம்ப் பகுதிக்கு இடம் பெயர்ந்தது.

பின்னர், அங்கிருந்து கூடலூர் அருகேவுள்ள கழுதை மேட்டில் சுற்றித் திரிந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை 4 மணியளவில் அரி கொம்பன் அங்கிருந்து கூடலூர் வழியாக கம்பம் பகுதிக்குள் நுழைந்தது. அங்கிருந்த விளைநிலங்களை சேதப்படுத்தியதோடு பொதுமக்களையும் விரட்டியது. இந்நிலையில், அரி கொம்பனை பிடிக்கும் முயற்ச்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அரிசி கொம்பனால் கம்பத்தில் 144 தடை... பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்ட 2 கும்கிகள்...

Last Updated : May 27, 2023, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.