ETV Bharat / state

மதுரை - போடி அகல ரயில் பாதை: உசிலம்பட்டி - ஆண்டிப்பட்டி வரை சோதனை ஓட்டம்

author img

By

Published : Dec 11, 2020, 8:06 PM IST

தேனி: மதுரை - போடி அகல ரயில் பாதை வழித்தடத்தில் உசிலம்பட்டி முதல் ஆண்டிப்பட்டி வரை 21கி.மீ தூரத்திற்கு இன்று (டிச.11) ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.

madurai
madurai

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதையாக உருவாக்கப்பட்ட போடி - மதுரை வழித்தடத்தை, அகல ரயில் பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த 2010ஆம் ஆண்டு வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. பின்னர் இந்த ரயில் தடத்தை அகலப்பாதையாக மாற்ற ரயில்கள் நிறுத்தப்பட்டு மீட்டர் கேஜ் ரயில் பாதை அகற்றப்பட்டது.

போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் ஆமை வேகத்தில் பணிகள் நடந்துவந்ததால், கடந்த 10 ஆண்டுகளாக ரயில் போக்குவரத்து இல்லாத மாவட்டமாக தேனி இருந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டதால் பணிகள் வேகமெடுக்கத் தொடங்கின.

மதுரை முதல் உசிலம்பட்டி வரையிலான 37 கிலோ மீட்டர் வழித்தடம் நிறைவு பெற்று முதற்கட்டமாக கடந்த ஜனவரி மாதம் சோதனை ஓட்டமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி முதல் போடி வரையிலான 53 கிலோ மீட்டர் தூர வழித்தடங்களில் பணிகள் துரிதமாக நடந்துவருகிறது. தற்போது, உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரையிலான 21 கிலோ மீட்டர் தூர பணிகள் நிறைவடைந்துள்ளன.

ஆண்டிப்பட்டி ரயில் நிலையக் கட்டடம், நடைமேடை, கிராசிங் பாலம் உள்ளிட்ட பணிகள் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உசிலம்பட்டி முதல் ஆண்டிப்பட்டி வரை உள்ள 21 கிலோ மீட்டர் தூரத்தில் இன்று (டிச.11) ரயில் இன்ஜின் இயக்கி சோதனை நடந்தது. உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆண்டிப்பட்டி முதல் உசிலம்பட்டிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது.

உசிலம்பட்டி - ஆண்டிப்பட்டி வரை ரயில் சோதனை ஓட்டம்

இந்த சோதனை ஓட்டத்தில் மதுரை ரயில்வே தலைமை நிலைய பொறியாளர், ரயில்வே காவல்துறையினர் உள்பட எட்டு பேர் கொண்ட குழு பயணித்தது. டிசம்பர் 16ஆம் தேதி இன்ஜினுடன் பயணிகள் பெட்டிகள் இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட 4 பேருக்கு எதிரான அவதூறு வழக்குகள் ரத்து

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதையாக உருவாக்கப்பட்ட போடி - மதுரை வழித்தடத்தை, அகல ரயில் பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த 2010ஆம் ஆண்டு வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. பின்னர் இந்த ரயில் தடத்தை அகலப்பாதையாக மாற்ற ரயில்கள் நிறுத்தப்பட்டு மீட்டர் கேஜ் ரயில் பாதை அகற்றப்பட்டது.

போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் ஆமை வேகத்தில் பணிகள் நடந்துவந்ததால், கடந்த 10 ஆண்டுகளாக ரயில் போக்குவரத்து இல்லாத மாவட்டமாக தேனி இருந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டதால் பணிகள் வேகமெடுக்கத் தொடங்கின.

மதுரை முதல் உசிலம்பட்டி வரையிலான 37 கிலோ மீட்டர் வழித்தடம் நிறைவு பெற்று முதற்கட்டமாக கடந்த ஜனவரி மாதம் சோதனை ஓட்டமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி முதல் போடி வரையிலான 53 கிலோ மீட்டர் தூர வழித்தடங்களில் பணிகள் துரிதமாக நடந்துவருகிறது. தற்போது, உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரையிலான 21 கிலோ மீட்டர் தூர பணிகள் நிறைவடைந்துள்ளன.

ஆண்டிப்பட்டி ரயில் நிலையக் கட்டடம், நடைமேடை, கிராசிங் பாலம் உள்ளிட்ட பணிகள் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உசிலம்பட்டி முதல் ஆண்டிப்பட்டி வரை உள்ள 21 கிலோ மீட்டர் தூரத்தில் இன்று (டிச.11) ரயில் இன்ஜின் இயக்கி சோதனை நடந்தது. உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆண்டிப்பட்டி முதல் உசிலம்பட்டிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது.

உசிலம்பட்டி - ஆண்டிப்பட்டி வரை ரயில் சோதனை ஓட்டம்

இந்த சோதனை ஓட்டத்தில் மதுரை ரயில்வே தலைமை நிலைய பொறியாளர், ரயில்வே காவல்துறையினர் உள்பட எட்டு பேர் கொண்ட குழு பயணித்தது. டிசம்பர் 16ஆம் தேதி இன்ஜினுடன் பயணிகள் பெட்டிகள் இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட 4 பேருக்கு எதிரான அவதூறு வழக்குகள் ரத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.