ETV Bharat / state

இருசக்கர வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு;மற்றொருவர் படுகாயம்!

author img

By

Published : Nov 21, 2019, 3:30 PM IST

தேனி:குமுளி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது எதிரில் வந்த ஜீப் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

two wheeler accident death in kumily road

கேரள மாநிலம் குமுளி பகுதியைச் சேர்ந்த அருணும் அவரது நண்பர் வருஷநாடு பகுதியைச் சேரந்த குமரேசனும் கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள 1ஆவது மைல் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் இருவரம் நேற்று இருசக்கர வாகனத்தில் கம்பத்திலிருந்து குமுளி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது இவர்களுக்குப்பின்னால் வந்த சரக்கு வாகனம் இவர்களின் இருசக்கர வாகனத்தை முந்திச்சென்றுள்ளது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் நிலைதடுமாறி சாலையோரம் விழுந்தனர்.

அப்போது எதிர்புறம வந்த ஜீப் இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது சாலையோரம் இருந்த பள்ளத்தில் முட்டி நின்றது. இந்த விபத்தில் குமரேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்து காவல்துறையினர், விபத்தில் உயிரிழந்த குமரேசனின் உடலை கம்பம் அரசுமருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்ததோடு, விபத்தில் படுகாயமடைந்த குமரேசனை தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தேனி கூடலூர் அருகே விபத்து

விபத்துகுறித்து வழக்குப்பதிவு செய்த கூடலூர் தெற்கு காவல் நிலைய காவலர்கள், சரக்கு வாகனத்தின் ஓட்டுநர், ஜீப் ஓட்டுநர் ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கேரள அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் முற்றுகை போராட்டம்!

கேரள மாநிலம் குமுளி பகுதியைச் சேர்ந்த அருணும் அவரது நண்பர் வருஷநாடு பகுதியைச் சேரந்த குமரேசனும் கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள 1ஆவது மைல் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் இருவரம் நேற்று இருசக்கர வாகனத்தில் கம்பத்திலிருந்து குமுளி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது இவர்களுக்குப்பின்னால் வந்த சரக்கு வாகனம் இவர்களின் இருசக்கர வாகனத்தை முந்திச்சென்றுள்ளது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் நிலைதடுமாறி சாலையோரம் விழுந்தனர்.

அப்போது எதிர்புறம வந்த ஜீப் இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது சாலையோரம் இருந்த பள்ளத்தில் முட்டி நின்றது. இந்த விபத்தில் குமரேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்து காவல்துறையினர், விபத்தில் உயிரிழந்த குமரேசனின் உடலை கம்பம் அரசுமருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்ததோடு, விபத்தில் படுகாயமடைந்த குமரேசனை தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தேனி கூடலூர் அருகே விபத்து

விபத்துகுறித்து வழக்குப்பதிவு செய்த கூடலூர் தெற்கு காவல் நிலைய காவலர்கள், சரக்கு வாகனத்தின் ஓட்டுநர், ஜீப் ஓட்டுநர் ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கேரள அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் முற்றுகை போராட்டம்!

Intro: கூடலூரில் இருசக்கர வாகனம் மீது ஏறிய சரக்கு வாகனம் விபத்து. ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் பலி. ஒருவர் படுகாயம் - கூடலூர் தெற்கு காவல்துறையினரர் விசாரணை
Body:         கேரள மாநிலம் குமுளி பகுதியை சேர்ந்த அருண் மற்றும் அவரது நண்பர் வருஷநாடு பகுதியை சேர்ந்த குமரேசன் இருவரும் கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள 1ம் மைல் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் சமையல் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நணபர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் கம்பத்தில் இருந்து குமுளி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதே திசையில் சரக்கு வாகனம்(குட்டியானை) குமுளி நோக்கி சென்றுகொண்டிருந்தது. சரக்கு வாகனம் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை முந்திச் சென்றுள்ளதாகவும், இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் நிலைதடுமாறி சாலையோரம் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
         இதனிடையே இவர்கள் சென்ற எதிர்திசையில் குமுளியில் இருந்து கம்பம் நோக்கி வந்து கொண்டிருந்த கூலி வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் ஜீப் ஒன்று வந்துள்ளது. சாலையில் கிடந்த இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் ஏறியதில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்று பள்ளத்தில் முட்டி நின்றது. இந்த சாலை விபத்தில் குமரேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
         இந்த விபத்து சம்பவம் குறித்து கூடலூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் படுகாயமடைந்த அருணை சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனை கல்லூரி கொண்டு சென்றனர்.
         மேலும் விபத்தில் உயிரிழந்த குமரேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Conclusion: இது குறித்து சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் ஜீப் ஓட்டுநர் ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று கூடலூர் தெற்கு காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.