ETV Bharat / state

வாக்குச்சீட்டில் ஏற்பட்ட குளறுபடி - உப்புக்கோட்டை ஊராட்சியில் மறுவாக்குப்பதிவு - Rural Local Elections Uppukkottai

தேனி: கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் ராசு என்பவரின் சின்னம் வாக்குச்சீட்டில் இடம்பெறாததால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி புதன்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

repolling
repolling
author img

By

Published : Jan 2, 2020, 7:47 AM IST

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில், தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றியங்களில் டிசம்பர் 27இல் முதற்கட்டமாகவும் தேனி, போடி, பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய ஆறு ஒன்றியங்களில் டிசம்பர் 30ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குச்சீட்டால் ஏற்பட்ட குளறுபடி

இதில் போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்புக்கோட்டை ஊராட்சியில், கிராம ஊராட்சி 8ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் ராசு என்பவருக்கு ஒதுக்கப்பட்ட 'கார் சின்னம்' வாக்குச்சீட்டில் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவ் நடத்திய விசாரணையில் தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட வார்டுக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் பரிந்துரை செய்தார்.

உப்புக்கோட்டை ஊராட்சியில் மறுவாக்குப்பதிவு

மறுவாக்குப்பதிவு

அதனடிப்படையில் உப்புக்கோட்டை ஊராட்சி பச்சையப்பா மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் - 52AVஇல் புதன்கிழமை காலை 7.00 மணி முதல் 5.00 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குகளைச் செலுத்தினர். வாக்களித்தவர்களுக்கு அடையாள மை இடது கை நடுவிரலில் வைக்கப்பட்டது.

முன்னதாக இந்த வார்டில் டிசம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 80 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வேட்பாளரின் பெயர், சின்னம் இடம்பெறாததால் மறு வாக்குப்பதிவுக்குப் பரிந்துரை

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில், தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றியங்களில் டிசம்பர் 27இல் முதற்கட்டமாகவும் தேனி, போடி, பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய ஆறு ஒன்றியங்களில் டிசம்பர் 30ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குச்சீட்டால் ஏற்பட்ட குளறுபடி

இதில் போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்புக்கோட்டை ஊராட்சியில், கிராம ஊராட்சி 8ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் ராசு என்பவருக்கு ஒதுக்கப்பட்ட 'கார் சின்னம்' வாக்குச்சீட்டில் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவ் நடத்திய விசாரணையில் தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட வார்டுக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் பரிந்துரை செய்தார்.

உப்புக்கோட்டை ஊராட்சியில் மறுவாக்குப்பதிவு

மறுவாக்குப்பதிவு

அதனடிப்படையில் உப்புக்கோட்டை ஊராட்சி பச்சையப்பா மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் - 52AVஇல் புதன்கிழமை காலை 7.00 மணி முதல் 5.00 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குகளைச் செலுத்தினர். வாக்களித்தவர்களுக்கு அடையாள மை இடது கை நடுவிரலில் வைக்கப்பட்டது.

முன்னதாக இந்த வார்டில் டிசம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 80 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வேட்பாளரின் பெயர், சின்னம் இடம்பெறாததால் மறு வாக்குப்பதிவுக்குப் பரிந்துரை

Intro: உப்புக்கோட்டை ஊராட்சியில் வாக்குச்சீட்டில் ஏற்பட்ட குளறுபடியால் மறு வாக்குப்பதிவு.
கிராம ஊராட்சி 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் ராசு என்பவரின் சின்னம் வாக்குச்சீட்டில் இடம்பெறாததால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இன்று காலை 7மணி முதல் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.


Body: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள 8ஒன்றியங்களில் ஆண்டிபட்டி, கடமலை - மயிலை ஆகிய இரண்டு ஒன்றியங்களில் டிசம்பர் 27ல் முதற்கட்டமாகவும், தேனி, போடி, பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம் மற்றும் கம்பம் ஆகிய 6ஒன்றியங்களில் டிசம்பர் 30 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்புக்கோட்டை ஊராட்சியில் கிராம ஊராட்சி 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் ராசு என்பவருக்கு ஒதுக்கப்பட்ட கார் சின்னம் வாக்குச்சீட்டில் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவ் நடத்திய விசாரணையில் தவறு உறுதி செய்யப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட வார்டுக்கு மட்டும் மறு தேர்தல் நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் பரிந்துரை செய்தார்.
அதனடிப்படையில் உப்புக்கோட்டை ஊராட்சி பச்சையப்பா மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் - 52AVல் இன்று காலை 7.00மணி முதல் 5.00மணி வரை மறு வாக்குப்பதிவு நடத்திட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் அந்த வாக்குச்சிவடியில் மறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
காலை 7.00மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு தற்போது வரை அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். இதில் அடையாள மை இடது கை நடுவிரலில் வைக்கப்படுகிறது.



Conclusion: இந்த வார்டில் மொத்த வாக்காளர்கள் 419பேர். இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குப்பதிவில் 80சதவீதம் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது காலை 9.00மணி நிலவரப்படி 30%சதவீதம் பதிவாகியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.