ETV Bharat / state

பாலியல் தொந்தரவு வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள்! - theni 5 year old child sexual abuse case

தேனி: பெரியகுளம் அருகே ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

theni 5 year old child sexual abuse case accused got double life sentence
பாலியல் தொந்தரவு வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள்!
author img

By

Published : Dec 27, 2019, 9:06 AM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் கடந்தாண்டு அக்டோபரில் ஐந்து வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், பெரியகுளம் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகராஜ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

இதன் வழக்கு விசாரணை தேனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நாகராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து தேனி மகிளா நீதிமன்ற நீதிபதி கீதா தீர்ப்பளித்துள்ளார்.

பாலியல் தொந்தரவு வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள்!

இந்த இரட்டை ஆயுளை ஏககாலத்திற்கு அனுபவிக்கவும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குற்றவாளியை தகுந்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: மேலும் ஒருவருக்கு தொடர்பு?

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் கடந்தாண்டு அக்டோபரில் ஐந்து வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், பெரியகுளம் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகராஜ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

இதன் வழக்கு விசாரணை தேனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நாகராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து தேனி மகிளா நீதிமன்ற நீதிபதி கீதா தீர்ப்பளித்துள்ளார்.

பாலியல் தொந்தரவு வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள்!

இந்த இரட்டை ஆயுளை ஏககாலத்திற்கு அனுபவிக்கவும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குற்றவாளியை தகுந்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: மேலும் ஒருவருக்கு தொடர்பு?

Intro: பெரியகுளம் அருகே 5வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 30ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தேனி மகளிர் நீதி மன்றம் தீர்ப்பு.
Body: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் கடந்தாண்டு அக்டோபரில் 5வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், பெரியகுளம் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகராஜ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இதன் வழக்கு விசாரணை தேனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றவாளி நாகராஜிற்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.30ஆயிரம் அபராதம் விதித்து தேனி மகிளா நீதிமன்ற நீதிபதி கீதா தீர்ப்பளித்தார். இந்த இரட்டை ஆயுளை ஏககாலத்திற்கு அனுபவிக்கவும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் 6ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Conclusion: இதனையடுத்து குற்றவாளியை தகுந்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.