ETV Bharat / state

ஆள்மாறாட்டம் செய்தது உண்மை தான் என உதித் சூர்யா தந்தை ஒப்புதல்

தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது உண்மை தான் என கைது செய்யப்பட்டுள்ள மாணவன் உதித் சூர்யாவின் தந்தை ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

author img

By

Published : Sep 26, 2019, 6:08 PM IST

Updated : Sep 26, 2019, 6:51 PM IST

உதித் சூர்யா

நீட் தேர்வு மூலம் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா என்ற மாணவர் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர், கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து உதித் சூர்யாவைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் முன்ஜாமீன் கேட்டு மதுரை நீதிமன்றத்தில் உதித் சூர்யா தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மாணவர் உதித் சூர்யாவை, சிபிசிஐடி முன்பு ஆஜராக நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் மாணவர் ஆஜராகாத நிலையில் திருப்பதியில் பெற்றோருடன் இருந்த உதித் சூர்யாவை தனிப்படையினர் கைது செய்து சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட உதித் சூர்யா, அவரது தாய் கயல்விழி, தந்தை வெங்கடேசன் ஆகிய மூன்று பேரையும் சென்னை சிபிசிஐடி காவலர்கள் தேனி சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் தேனி சிபிசிஐடி இன்று விசாரணை நடத்தியது. அதில் மகனை மருத்துவராக்க வேண்டும் என்ற ஆசையில், ஆள்மாறாட்டம் செய்தது உண்மை தான் என உதித் சூர்யாவின் தந்தை ஒப்புகொண்டதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக்குப்பின் உதித் சூர்யாவின் தாய் கயல்விழி விடுவிக்கப்பட்டார்.

நீட் தேர்வு மூலம் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா என்ற மாணவர் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர், கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து உதித் சூர்யாவைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் முன்ஜாமீன் கேட்டு மதுரை நீதிமன்றத்தில் உதித் சூர்யா தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மாணவர் உதித் சூர்யாவை, சிபிசிஐடி முன்பு ஆஜராக நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் மாணவர் ஆஜராகாத நிலையில் திருப்பதியில் பெற்றோருடன் இருந்த உதித் சூர்யாவை தனிப்படையினர் கைது செய்து சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட உதித் சூர்யா, அவரது தாய் கயல்விழி, தந்தை வெங்கடேசன் ஆகிய மூன்று பேரையும் சென்னை சிபிசிஐடி காவலர்கள் தேனி சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் தேனி சிபிசிஐடி இன்று விசாரணை நடத்தியது. அதில் மகனை மருத்துவராக்க வேண்டும் என்ற ஆசையில், ஆள்மாறாட்டம் செய்தது உண்மை தான் என உதித் சூர்யாவின் தந்தை ஒப்புகொண்டதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக்குப்பின் உதித் சூர்யாவின் தாய் கயல்விழி விடுவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க:காற்றில் கரைந்த கனவு: டாக்டர் அனிதாவுக்கு 2ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி!

Intro: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது பெற்றோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு, சிபிசிஐடி தென்மண்டல எஸ்.பி.விஜயகுமார் தகவல்.


Body: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது பெற்றோர் வெங்கடேசன் - கயல்விழி ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து தென்மண்டல கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் துணை கண்காணிப்பாளர் காட்வின் ஜெகதீஷ் ஆகியோர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டன. மேலும் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் மாணவர் அவரது பெற்றோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக தென்மண்டல எஸ்.பி.விஜயகுமாரிடம் கேட்டபோது, மாணவர் உதித்சூர்யா, அவரது பெற்றோர் வெங்கடேசன் - கயல்விழி ஆகிய மூன்று பேர் மீதும் 120(பி) 419, 420 உள்ளிட்ட பிரிவுகளான ஆவணங்களை மாற்றி புதிதாக ஆவணங்கள் தயார் செய்தல், குற்றவாளிகளை தப்பவிடுதல், குற்றவாளிக்கு அடைக்கலம் தருதல், கூட்டுச்சதி உள்ளிட்ட 3பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Conclusion: தொடர்ந்து விசாரணைக்குப் பிறகு உதித்சூர்யா மற்றும் அவரது பெற்றோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
Last Updated : Sep 26, 2019, 6:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.