ETV Bharat / state

ஆட்சியர் அலுவலகத்தில் மக்களிடம் தீவிர சோதனை! தேனியில் பரபரப்பு

தேனி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு இன்று வந்த பொதுமக்களை காவல் துறையினர் தீவிர பரிசோதனை செய்த பிறகே அனுமதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

author img

By

Published : Feb 18, 2019, 11:55 PM IST

theni

குன்னூரைச் சேர்ந்த முனியாண்டி (57) என்பவர், தன்னிடம் பணமோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால், கடந்த பிப்.14-ம் தேதி ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பிப்.15-ம் தேதி உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் மனுக்களுடன் வந்தனர். அப்போது, நுழைவு வாயிலில் இருந்த காவல் துறையினர் பொதுமக்களின் பைகளில் பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள்கள் இருக்கிறதா? என்றும், பொதுமக்கள் குடிநீருக்காகக் கொண்டுவந்த பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்து பார்த்து தீவிர பரிசோதனை செய்தபிறகே, அலுவலக வளாகத்திற்குள் அனுமதித்தனர்.

இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

குன்னூரைச் சேர்ந்த முனியாண்டி (57) என்பவர், தன்னிடம் பணமோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால், கடந்த பிப்.14-ம் தேதி ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பிப்.15-ம் தேதி உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் மனுக்களுடன் வந்தனர். அப்போது, நுழைவு வாயிலில் இருந்த காவல் துறையினர் பொதுமக்களின் பைகளில் பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள்கள் இருக்கிறதா? என்றும், பொதுமக்கள் குடிநீருக்காகக் கொண்டுவந்த பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்து பார்த்து தீவிர பரிசோதனை செய்தபிறகே, அலுவலக வளாகத்திற்குள் அனுமதித்தனர்.

இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

Intro: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதியவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் எதிரொலி,
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை தந்த மக்களிடம் இருந்த குடிநீரை குடித்து பார்த்து, ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதித்த காவல்துறையினர்.


Body: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆண்டிபட்டி தாலுகாவை சேர்ந்த முனியாண்டி என்ற முதியவர் பணமோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்து ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அச்சம்பவத்தை தொடர்ந்து இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த அனைவரையும் காவல்துறையினர் தீவிர பரிசோதனை செய்த பின்னரே அலுவலக வளாகத்திற்குள் அனுமதித்தனர்.
திங்கள் கிழமை என்பதால் ஆட்சியர் அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். நுழைவு வாயிலில் இருந்த காவல்துறையினர் பொதுமக்களின் பைகளில் பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள் இருக்கிறதா என்று சோதனை மேற்கொண்டனர். மேலும் குடிநீருக்காக பொதுமக்கள் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த தண்ணீரை காவல்துறையினர் குடித்து பார்த்து பரிசோதனை செய்தனர்.



Conclusion: காவல்துறையினரின் இந்த சோதனையால் ஆட்சியர் அலுவலகம் வந்த பொதுமக்கள் குழப்பத்துடனே சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.