ETV Bharat / state

நியூட்ரினோ குறித்து சட்டப்பேரவையில் தெளிவுபடுத்த வேண்டும் -  பி.ஆர். பாண்டியன்

author img

By

Published : Jul 16, 2019, 1:24 PM IST

தேனி: நியூட்ரினோ திட்டம் குறித்து சட்டப்பேரவையில் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

பி. ஆர். பாண்டியன்

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில், ரூ.1500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு அரசியல் கட்சிகள் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன.

அரசு சட்டசபையில் தெளிவுபடுத்த வேண்டும்

இந்நிலையில், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் பேசிய மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், நியூட்ரினோ திட்டம் அமைக்க மத்திய அணுசக்தி துறை அனுமதி அளித்திருக்கிறது என எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்தார். இதனால், நியூட்ரினோ திட்டம் குறித்த அச்சம் பொட்டிபுரம் பகுதி மக்களிடம் நிலவியது.

இச்சூழலில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் பொட்டிபுரம் அம்பரப்பர் மலைக்கு செல்ல இருந்தார். ஆனால், முத்தாலம்மன் கோயில் அருகே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பி.ஆர் பாண்டியன்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நியூட்ரினோ என்கிற திட்டத்தால் பொட்டிபுரம், புதுக்கோட்டை, ராமகிருஷ்ணாபுரம் பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். எனவே, நியூட்ரினோ திட்டம் குறித்த பொதுமக்களின் அச்சத்தை கலைக்க சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

நியூட்ரினோ திட்டத்தைப் பேரழிவு திட்டம் என்கிறார்கள். இதனால் விவசாயம் அழிந்து போகும், கால்நடை வளர்ப்பு பாதிப்படையும். இதுகுறித்து, தமிழக அரசு உரிய விளக்கம் கொடுக்கவில்லை என்றால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்' என்று எச்சரிக்கை விடுத்தார்.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில், ரூ.1500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு அரசியல் கட்சிகள் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன.

அரசு சட்டசபையில் தெளிவுபடுத்த வேண்டும்

இந்நிலையில், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் பேசிய மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், நியூட்ரினோ திட்டம் அமைக்க மத்திய அணுசக்தி துறை அனுமதி அளித்திருக்கிறது என எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்தார். இதனால், நியூட்ரினோ திட்டம் குறித்த அச்சம் பொட்டிபுரம் பகுதி மக்களிடம் நிலவியது.

இச்சூழலில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் பொட்டிபுரம் அம்பரப்பர் மலைக்கு செல்ல இருந்தார். ஆனால், முத்தாலம்மன் கோயில் அருகே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பி.ஆர் பாண்டியன்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நியூட்ரினோ என்கிற திட்டத்தால் பொட்டிபுரம், புதுக்கோட்டை, ராமகிருஷ்ணாபுரம் பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். எனவே, நியூட்ரினோ திட்டம் குறித்த பொதுமக்களின் அச்சத்தை கலைக்க சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

நியூட்ரினோ திட்டத்தைப் பேரழிவு திட்டம் என்கிறார்கள். இதனால் விவசாயம் அழிந்து போகும், கால்நடை வளர்ப்பு பாதிப்படையும். இதுகுறித்து, தமிழக அரசு உரிய விளக்கம் கொடுக்கவில்லை என்றால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்' என்று எச்சரிக்கை விடுத்தார்.

Intro: நியூட்ரினோ திட்டம் குறித்து சட்டசபையில் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். பி.ஆர் பாண்டியன் பொட்டிபுரத்தில் பேட்டி.


Body: மத்திய அரசு சுமார் 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்க திட்டமிட்டு அதற்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் பேசிய மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நியூட்ரினோ திட்டம் அமைக்க மத்திய அணுசக்தி துறை அனுமதி அளித்திருக்கிறது என எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்தார். இதனால் நியூட்ரினோ திட்டம் குறித்த அச்சம் பொட்டிபுரம் பகுதி மக்களிடம் நிலவியது.
இச்சூழலில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் இன்று நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலைக்கு செல்ல இருந்தார். ஆனால் வழியில் புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவில் அருகே அவர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் இங்கு போராட வரவில்லை. மக்களை சந்தித்து பேசவும், அம்பரப்பர் மலையை பார்க்கவும் தான் வந்தேன். ஆனால் நான் காலையில் புறப்படும்போது நீங்கள் பொட்டிபுரம் வரக்கூடாது, தேவாரம் வட்டாரத்தில் எங்குமே பேட்டி அளிக்க கூடாது என போலீசார் போனில் என்னை மிரட்டல் விடுத்தனர். நான் என்ன தீவிரவாதியா? நியூட்ரினோ என்கிற திட்டத்தால் பொட்டிபுரம், புதுக்கோட்டை, ராமகிருஷ்ணாபுரம் பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். அவர்களை அச்சத்தைப் போக்க நியூட்ரினோ திட்டம் குறித்து தமிழக அரசு சட்டசபையில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இது துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தொகுதி அவர் நியூட்ரினோ திட்டம் குறித்து சட்டசபையில் தெளிவுபடுத்த வேண்டும். நியூட்ரினோ திட்டத்தை பேரழிவு திட்டம் என்கிறார்கள்.இதனால் விவசாயம் அழிந்து போகும், கால்நடை வளர்ப்பு பாதிப்படையும். இதுகுறித்து தமிழக அரசு உரிய விளக்கம் கொடுக்கவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.


Conclusion: பி.ஆர்.பாண்டியன் வருகையையொட்டி பொட்டிப்புரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பேட்டி : பி.ஆர். பாண்டியன் (தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர்)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.