ETV Bharat / state

நீட் தேர்வு விவகாரம்: ஆங்காங்கு ஆஜராகும் இர்ஃபான்... அடுத்து எங்கே? - irfan to be in aundipatti court

தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் இர்ஃபானை காவல் துறையினர் இன்று ஆண்டிபட்டியில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மாணவர் இர்பான்
author img

By

Published : Oct 9, 2019, 6:55 PM IST

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த மாணவர் இர்ஃபான் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்வுக்குழுவினரும் சிபிசிஐடியும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரி இயக்ககத்தின் வழிகாட்டுதலின்படி, தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாச ராஜு செப்டம்பர் 30ஆம் தேதி, இர்ஃபானை மருத்துவக் கல்லூரியிலிருந்து நீக்கம் செய்து அதற்கான கடிதத்தைப் பதிவு அஞ்சலில் அனுப்பினார்.

இர்ஃபானின் தந்தை முகமது சபியிடம் தேனி சிபிசிஐடி விசாரணை நடத்தியதில், அவர் மூன்று ஆண்டுகள் மட்டும் மருத்துவப் படிப்பு படித்துவிட்டு முறையாக பட்டம் பெறாமல் வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் மருத்துவமனை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முகமது சபியை வரும் 16ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க, நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.

பின்னர் தலைமறைவாக இருந்து வந்த மாணவர் இர்ஃபான் கடந்த 1ஆம் தேதி சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவைர ஒன்பது நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் நீதிமன்ற காவலில் இருந்த இர்ஃபானின், தண்டனைக்காலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இர்ஃபானை காவல் துறையினர் இன்று ஆண்டிபட்டியில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை விசாரித்த நீதிபதி மகேந்திர வர்மா தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவிட்டார்.

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த மாணவர் இர்ஃபான் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்வுக்குழுவினரும் சிபிசிஐடியும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரி இயக்ககத்தின் வழிகாட்டுதலின்படி, தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாச ராஜு செப்டம்பர் 30ஆம் தேதி, இர்ஃபானை மருத்துவக் கல்லூரியிலிருந்து நீக்கம் செய்து அதற்கான கடிதத்தைப் பதிவு அஞ்சலில் அனுப்பினார்.

இர்ஃபானின் தந்தை முகமது சபியிடம் தேனி சிபிசிஐடி விசாரணை நடத்தியதில், அவர் மூன்று ஆண்டுகள் மட்டும் மருத்துவப் படிப்பு படித்துவிட்டு முறையாக பட்டம் பெறாமல் வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் மருத்துவமனை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முகமது சபியை வரும் 16ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க, நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.

பின்னர் தலைமறைவாக இருந்து வந்த மாணவர் இர்ஃபான் கடந்த 1ஆம் தேதி சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவைர ஒன்பது நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் நீதிமன்ற காவலில் இருந்த இர்ஃபானின், தண்டனைக்காலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இர்ஃபானை காவல் துறையினர் இன்று ஆண்டிபட்டியில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை விசாரித்த நீதிபதி மகேந்திர வர்மா தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவிட்டார்.

இதையும் படியுங்க:

நீட் தேர்வு முறைகேடு: இர்ஃபான் தந்தை முகமது சபிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

நீட் முறைகேடு: இர்பான் கல்லூரியிலிருந்து நீக்கம்!

Intro: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் இர்பான் ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்.
Body: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதிர் சூர்யா அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் சிபிசிஐடி போலீசாரிடம் அளித்த தகவலின் அடிப்படையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட எஸ்ஆர்எம் கல்லூரியை சேர்ந்த மாணவன் ராகுல் அவரது தந்தை டேவிஸ் சென்னை பாலாஜி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் பிரவீன் அவரது தந்தை சரவணகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் இர்பானின் தந்தை முகமது சபி கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலூர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதில் மாணவர் இர்பான் மட்டும் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இர்பான் சரண் அடைந்தார். மாணவரை ஒன்பது நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்ற காவல் நிறைவு பெற்றதை தொடர்ந்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் இர்பானை காவல் துறையினர் இன்று ஆண்டிபட்டியில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை விசாரித்த நீதிபதி மகேந்திர வர்மா தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவிட்டார்.
Conclusion: அதனைக் தொடர்ந்து தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் தேனிக்கு மாணவர் இர்பான் அழைத்து செல்லப்பட்டார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.