ETV Bharat / state

நீட் ஆள்மாறாட்ட வழக்கு - குற்றவாளிகளுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேருக்கு வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற காவலை மேலும் 15 நாள்களுக்கு நீட்டித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Oct 11, 2019, 2:50 PM IST

Updated : Oct 11, 2019, 7:04 PM IST

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் குற்றவாளிகள்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் நான்கு மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்களான பிரவின், ராகுல், அபிராமி, அவர்களது தந்தையர் சரவணன், டேவிஸ், மாதவன் ஆகியோரை விசாரணைக்காக கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தேனி அலுவலகத்திற்கு சிபிசிஐடி காவல் துறையினர் அழைத்து வந்தனர்.

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் குற்றவாளிகள்

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் பயின்றுவந்த மாணவர் பிரவின், பாலாஜி மருத்துவக் கல்லூரி மாணவர் ராகுல் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. இதில் மாணவி அபிராமி அவரது தந்தை மாதவன் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து விசாரணைக்காக மாணவர்கள் பிரவின், ராகுல் அவர்களது தந்தையர்கள் சரவணன், டேவிஸ் ஆகிய நால்வரும் செப்டம்பர் 28, 29 ஆகிய நாள்களில் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது விசாரணை மேற்கொண்ட நீதிபதி நான்கு பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் நால்வரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து, சிபிசிஐடி காவல் துறையினர் இன்று மீண்டும் விசாரணைக்காக நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்களிடம் விசாரித்த நீதிபதி மேலும் 15 நாள் நீதிமன்ற காவலை நீட்டித்தோடு, அக்டோபர் 25ஆம் தேதி நான்கு பேரையும் மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

இந்நிலையில் நான்குபேரின் சார்பில் பிணை கேட்டு வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் சிபிசிஐடி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலர் ஆஜராகததால் நீதிபதி விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் நான்கு மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்களான பிரவின், ராகுல், அபிராமி, அவர்களது தந்தையர் சரவணன், டேவிஸ், மாதவன் ஆகியோரை விசாரணைக்காக கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தேனி அலுவலகத்திற்கு சிபிசிஐடி காவல் துறையினர் அழைத்து வந்தனர்.

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் குற்றவாளிகள்

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் பயின்றுவந்த மாணவர் பிரவின், பாலாஜி மருத்துவக் கல்லூரி மாணவர் ராகுல் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. இதில் மாணவி அபிராமி அவரது தந்தை மாதவன் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து விசாரணைக்காக மாணவர்கள் பிரவின், ராகுல் அவர்களது தந்தையர்கள் சரவணன், டேவிஸ் ஆகிய நால்வரும் செப்டம்பர் 28, 29 ஆகிய நாள்களில் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது விசாரணை மேற்கொண்ட நீதிபதி நான்கு பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் நால்வரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து, சிபிசிஐடி காவல் துறையினர் இன்று மீண்டும் விசாரணைக்காக நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்களிடம் விசாரித்த நீதிபதி மேலும் 15 நாள் நீதிமன்ற காவலை நீட்டித்தோடு, அக்டோபர் 25ஆம் தேதி நான்கு பேரையும் மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

இந்நிலையில் நான்குபேரின் சார்பில் பிணை கேட்டு வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் சிபிசிஐடி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலர் ஆஜராகததால் நீதிபதி விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.

Intro: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை மாணவர்கள் பிரவின், ராகுல் அவர்களது தந்தையர் சரவணன், டேவிஸ் ஆகிய நால்வரது நீதிமன்றக் காவல் மேலும் 15நாள் நீட்டிப்பு.
வரும் அக்டோபர் 25ஆம் தேதி ஆஜர்படுத்த தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு.


Body: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தில் மேலும் 4மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பிரவின், ராகுல் இவர்களது தந்தை சரவணன், டேவிஸ் மற்றும் மாணவி அபிராமி அவரது தந்தை மாதவன் ஆகியோரை விசாரணைக்காக கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தேனியில் உள்ள அலுவலகத்திற்கு சிபிசிஐடி போலீசார் அழைத்து வந்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவகல்லூரியில் பயின்று வந்த மாணவர் பிரவின், பாலாஜி மருத்துவ கல்லூரி மாணவர் ராகுல் ஆகியோர் ஆள்மாறாட்டம் மோசடி செய்தது தெரியவந்தது. இதில் மாணவி அபிராமி அவரது தந்தை மாதவன் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து மாணவர்கள் பிரவின், ராகுல் அவர்களது தந்தையர்கள் சரவணன், டேவிஸ் ஆகிய நால்வரும் செப்-28, 29 ஆகிய அடுத்தடுத்த நாட்களில் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு நால்வரையும் 15நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் நால்வரும் தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நால்வரின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து இன்று நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி மேலும் 15நாள் நீதிமன்றக் காவலை நீட்டித்து வரும் அக்டோபர் 25ஆம் தேதி பிரவின், ராகுல் மற்றும் அவர்களின் தந்தை சரவணன், டேவிஸ் ஆகிய நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்திட உத்தரவிட்டார்.

த்தொடர்ந்து நால்வரின் சார்பில் தேனி நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு சென்னை வழக்கறிஞர் விஜயகுமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் சிபிசிஐடி சார்பில் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியான ஆய்வாளர் சித்ராதேவி நேரில் ஆஜராகததால், வழக்கை நாளை ஒத்தி வைப்பதாக நீதிபதி பன்னீர்செல்வம் அறிவித்தார்.





Conclusion: இதனையடுத்து நால்வரையும் தகுந்த பாதுகாப்புடன் தேனி மாவட்ட சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Last Updated : Oct 11, 2019, 7:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.