ETV Bharat / state

திருமணத்திற்கு மீறிய உறவிலிருந்த பெண் கொலை வழக்கில் ஆயுள் - theni Woman murdered case

தேனி: திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக குனசேகரன் என்பவருக்கு மாவட்ட மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த பெண் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு
author img

By

Published : Nov 25, 2019, 9:27 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கே.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் குனசேகரன் (40). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி சூரியகுமாரிக்கும்(36) கடந்த 2015ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் தொடர்ந்து திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியதையடுத்து மும்பைக்கு தன்னுடன் வருமாறு சூரியகுமாரியை குனசேகரன் வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு சூரியகுமாரி வர மறுத்ததால் ஆத்திரமடைந்த குனசேகரன் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சூரியகுமாரியின் உறவினர் ஜீவா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஆண்டிபட்டி காவல் துறையினர் குனசேகரனை கைது செய்து நீதிமன்றக் காவலில் உட்படுத்தினர்.

திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த பெண் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு

இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்து நிலையில், இன்று தேனி மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெண்னை கொலை செய்த குணசேகரனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து குணசேகரனை மத்திய சிறையில் அடைப்பதற்காக தகுந்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கே.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் குனசேகரன் (40). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி சூரியகுமாரிக்கும்(36) கடந்த 2015ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் தொடர்ந்து திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியதையடுத்து மும்பைக்கு தன்னுடன் வருமாறு சூரியகுமாரியை குனசேகரன் வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு சூரியகுமாரி வர மறுத்ததால் ஆத்திரமடைந்த குனசேகரன் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சூரியகுமாரியின் உறவினர் ஜீவா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஆண்டிபட்டி காவல் துறையினர் குனசேகரனை கைது செய்து நீதிமன்றக் காவலில் உட்படுத்தினர்.

திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த பெண் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு

இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்து நிலையில், இன்று தேனி மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெண்னை கொலை செய்த குணசேகரனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து குணசேகரனை மத்திய சிறையில் அடைப்பதற்காக தகுந்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவர் கைது!

Intro:          ஆண்டிபட்டி அருகே கள்ளக்காதலியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ10ஆயிரம் அபராதம் விதித்து தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.
Body: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கே.புதுப்பட்டியை சேர்ந்தவர் குனசேகரன் (40). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி சூரியகுமாரிக்கும்(36) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் தொடர்ந்து கள்ளக்காதலாக மாறியதையடுத்து மும்பைக்கு தன்னுடன் வருமாறு சூரியகுமாரியை குனசேகரன் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு வர மறுத்த சூரியகுமாரி கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டியில்; உள்ள தனது சகோதரி ஜீவாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து ஆண்டிபட்டிக்கு வந்த குனசேகரன் சூரியகுமாரியுடன் சண்டையிட்டு கத்தியால் அவரை சரமாறியாக குத்தியதில் உயரிழந்தாhர். இதுகுறித்து இறந்தவரின் சகோதரி ஜீவா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி காவல்துறையினர் குனசேகரனை கைது செய்து நீதிமன்றக் காவலில் உட்படுத்தினர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்து நிலையில், இன்று தேனி மகிளா நீதிமன்றத்தில் இறுதித்தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குணசேகரனுக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரு.10ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அபராதத்தை செலுத்தத்தவறினால் 2ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
Conclusion: இதனையடுத்து குற்றவாளியை மதுதை மத்திய சிறையில் அடைப்பதற்காக தகுந்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.