ETV Bharat / state

மலைப்பாதை வழியாக கேரளாவிற்குள் நுழைந்த தமிழர்கள்: தனிமைப்படுத்திய அரசு - kerela government order to quarantine tamilians crossing border

தேனி: கரோனா வைரஸ் நோய்த் தொற்றை, கேரள மாநிலம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் பிற மாநிலத்தில் இருந்து கேரளாவிற்குள் அத்துமீறி நுழைபவர்களை 28 நாள்கள் சிறை வைக்கவும் அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருந்து மலைப்பாதை வழியாக கேரளாவிற்குள் நுழைந்த தமிழர்கள் பிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

kerela government order to quarantine tamilians crossing border
kerela government order to quarantine tamilians crossing border
author img

By

Published : Apr 21, 2020, 8:32 PM IST

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திற்குத் தேனி மாவட்டத்தில் இருந்து குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய மலைச்சாலையே முக்கிய போக்குவரத்தாகும். இது தவிர சாக்குலூத்து மெட்டு, ராமக்கல் மெட்டு, தேவாரம் மெட்டு, குரங்கணி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட மலைப்பாதையில் நடைபயணமாகவும் சிலர் சென்று வருவர்.

தற்போது ஊரடங்கு உத்தரவால் மாநில எல்லைகள் மூடப்பட்டு, போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இதனால் தடை செய்யப்பட்ட மலைப்பாதையில், சிலர் கேரளாவிற்குச் சென்று வருவதை அம்மாநில காவல் துறையினர் கண்காணித்து அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இருந்து மலைப்பாதை வழியாக கேரளாவிற்குள் நுழைந்த 30க்கும் மேற்பட்ட தமிழர்களை அம்மாநில காவல் துறையினர் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் தங்க வைத்துள்ளனர். மூணாறு, கட்டப்பனா உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள சமுதாயக் கூடங்களில், தங்க வைக்கப்பட்டு அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

28 நாள்கள் தொடர்ந்து தங்க வைக்கப்படும் அறையில் பொழுதுபோக்கிற்காக டிவி போன்றவை வைத்துள்ளனர். அது மட்டுமின்றி மூன்று நேரமும் உணவுகளும் வழங்கப்படுகிறது.

கேரளாவிற்குள் நுழைந்த தமிழர்கள்

இதனையடுத்து 28 நாள்கள் முடிந்த பிறகு உரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட பின்பு அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க... கேரளா வழியா வராதீங்க... தமிழ்நாடு வருவாய் துறையினரை தடுத்த கேரள காவல் துறை!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திற்குத் தேனி மாவட்டத்தில் இருந்து குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய மலைச்சாலையே முக்கிய போக்குவரத்தாகும். இது தவிர சாக்குலூத்து மெட்டு, ராமக்கல் மெட்டு, தேவாரம் மெட்டு, குரங்கணி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட மலைப்பாதையில் நடைபயணமாகவும் சிலர் சென்று வருவர்.

தற்போது ஊரடங்கு உத்தரவால் மாநில எல்லைகள் மூடப்பட்டு, போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இதனால் தடை செய்யப்பட்ட மலைப்பாதையில், சிலர் கேரளாவிற்குச் சென்று வருவதை அம்மாநில காவல் துறையினர் கண்காணித்து அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இருந்து மலைப்பாதை வழியாக கேரளாவிற்குள் நுழைந்த 30க்கும் மேற்பட்ட தமிழர்களை அம்மாநில காவல் துறையினர் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் தங்க வைத்துள்ளனர். மூணாறு, கட்டப்பனா உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள சமுதாயக் கூடங்களில், தங்க வைக்கப்பட்டு அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

28 நாள்கள் தொடர்ந்து தங்க வைக்கப்படும் அறையில் பொழுதுபோக்கிற்காக டிவி போன்றவை வைத்துள்ளனர். அது மட்டுமின்றி மூன்று நேரமும் உணவுகளும் வழங்கப்படுகிறது.

கேரளாவிற்குள் நுழைந்த தமிழர்கள்

இதனையடுத்து 28 நாள்கள் முடிந்த பிறகு உரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட பின்பு அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க... கேரளா வழியா வராதீங்க... தமிழ்நாடு வருவாய் துறையினரை தடுத்த கேரள காவல் துறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.