ETV Bharat / state

கஸ்தூரிரங்கன் அறிக்கையை அமல்படுத்தக் கூடாது: இடுக்கி மாவட்டத்தில் முழு கடையடைப்பு

author img

By

Published : Nov 28, 2022, 11:53 AM IST

கஸ்தூரிரங்கன் அறிக்கையை அமல்படுத்தக் கூடாது என கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இன்று ஒரு நாள் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இடுக்கி மாவட்டத்தில் முழு கடையடைப்பு
இடுக்கி மாவட்டத்தில் முழு கடையடைப்பு

தேனி: கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வாழும் மக்களை அப்புறப்படுத்தி வனப்பகுதியாக மாற்ற வேண்டும் என்ற கஸ்தூரிரங்கன் அறிக்கையை உச்ச நீதிமன்றம் தற்போது அமல்படுத்த கூறியுள்ளது. இதனால் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் மட்டும் சுமார் 264 ஊர்களில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் இடுக்கி மாவட்டம் மக்கள் தொடர்ந்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று (நவ. 28) ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதனால் தமிழ்நாடு எல்லையான குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இடுக்கி மாவட்டத்தில் முழு கடையடைப்பு

ஆனால் ஐயப்பன் கோயில் சீசன் என்பதால் சபரிமலைக்கு செல்லும் வாகனங்களுக்கும், சுற்றுலா செல்லும் வாகனங்களுக்கும் சென்று வருகின்றன. அதுமட்டுமின்றி ஐயப்பன் பக்தர்களுக்கு தேவையான ஹோட்டல்கள், மெடிக்கல், பெட்ரோல் பங்க் ஆகியவைகளும் திறக்கப்பட்டுள்ளன.

இந்த ஒரு நாள் முழு கடையடைப்பினால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு செல்லும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் வேலை இழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "கே.சி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் ஐ.டி. ரெய்டு இருக்காது" - தெலங்கானா அமைச்சர் பேச்சு..

தேனி: கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வாழும் மக்களை அப்புறப்படுத்தி வனப்பகுதியாக மாற்ற வேண்டும் என்ற கஸ்தூரிரங்கன் அறிக்கையை உச்ச நீதிமன்றம் தற்போது அமல்படுத்த கூறியுள்ளது. இதனால் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் மட்டும் சுமார் 264 ஊர்களில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் இடுக்கி மாவட்டம் மக்கள் தொடர்ந்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று (நவ. 28) ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதனால் தமிழ்நாடு எல்லையான குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இடுக்கி மாவட்டத்தில் முழு கடையடைப்பு

ஆனால் ஐயப்பன் கோயில் சீசன் என்பதால் சபரிமலைக்கு செல்லும் வாகனங்களுக்கும், சுற்றுலா செல்லும் வாகனங்களுக்கும் சென்று வருகின்றன. அதுமட்டுமின்றி ஐயப்பன் பக்தர்களுக்கு தேவையான ஹோட்டல்கள், மெடிக்கல், பெட்ரோல் பங்க் ஆகியவைகளும் திறக்கப்பட்டுள்ளன.

இந்த ஒரு நாள் முழு கடையடைப்பினால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு செல்லும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் வேலை இழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "கே.சி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் ஐ.டி. ரெய்டு இருக்காது" - தெலங்கானா அமைச்சர் பேச்சு..

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.