ETV Bharat / state

இளைஞர் கொலை:  குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியல்..!

author img

By

Published : Nov 20, 2019, 5:30 AM IST

Updated : Nov 20, 2019, 6:41 AM IST

தேனி: உத்தமபாளையம் பகுதியில் இளைஞரை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

road protest

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உ. அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (29). இவர் ஜே.சி.பி ஓட்டுநரான இவருக்கு ரம்யா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் அம்மாபட்டி சாலையில் உள்ள நாடார் பங்களா பகுதியில் ராஜேஷ் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ராஜேஷை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் வழியிலேயே பரிதபாமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த உத்தமபாளையம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டதில் அதேப் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (23), பொம்மையன் (22) ஆகிய இருவரும் இணைந்து ராஜேஷை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.

சாலை மறியலில் ஈடுபட்டுள்ள ராஜேஷின் உறவினர்கள்

இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ராஜேஷின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் வந்த காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:

தொடரும் சாதிய வன்கொடுமை: தாழ்த்தப்பட்ட நபர் சிறுநீர் குடிக்கவைத்துக் கொடூரக் கொலை!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உ. அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (29). இவர் ஜே.சி.பி ஓட்டுநரான இவருக்கு ரம்யா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் அம்மாபட்டி சாலையில் உள்ள நாடார் பங்களா பகுதியில் ராஜேஷ் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ராஜேஷை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் வழியிலேயே பரிதபாமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த உத்தமபாளையம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டதில் அதேப் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (23), பொம்மையன் (22) ஆகிய இருவரும் இணைந்து ராஜேஷை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.

சாலை மறியலில் ஈடுபட்டுள்ள ராஜேஷின் உறவினர்கள்

இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ராஜேஷின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் வந்த காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:

தொடரும் சாதிய வன்கொடுமை: தாழ்த்தப்பட்ட நபர் சிறுநீர் குடிக்கவைத்துக் கொடூரக் கொலை!

Intro: உத்தமபாளையம் அருகே கட்டையால் அடித்தும், கத்தியால் குத்தி வாலிபர் கொலை. உறவினர்கள் சாலை மறியல், உத்தமபாளையம் காவல்துறையினர் விசாரணை
Body:         தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உ.அம்பாசமுத்திரத்தை சார்ந்த லட்சுமணன் என்பவரது மகன் ராஜேஷ் (29). ஜே.சி.பி ஓட்டுநரான இவருக்கு ரம்யா என்ற பெண்ணுடன் திருமணம் முடித்து இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நேற்றிரவு உத்தமபாளையம் அம்மாபட்டி சாலையில் உள்ள நாடார் பங்களா களம் என்ற இடத்தில் ரத்த வெள்ளத்தில் குத்தப்பட்ட நிலையில் ராஜேஷ் கிடந்துள்ளார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
         உடனடியாக ராஜேஷின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேஷை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர்; உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக ராஜேஷின் தாய்மாமா முருகன் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
         புகாரில் உ.அம்பாசமுத்திரம் பகுதியைச் சார்ந்த செல்வகுமார்(23) மற்றும் பொம்மையன்(22) என்ற இருவரும் சேர்ந்து ராஜேஷை கட்டை மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்ததாக கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இருவர் மீது உத்தமபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.         
இதனிடையே இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதால் அங்கு ராஜேஷின் உறவினர்கள் மற்றும் உ.அம்பாசமுத்திரத்தை சேர்ந்த பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
         இந்நிலையில் ராஜேஷின் மரணத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.         
சம்பவ இடத்திற்கு வந்த உத்தமபாளையம் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் ராஜேஷ் கொலை வழக்கு சம்பந்தமாக இருவர் கைது செய்யப்பட்டதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததையடுத்து சாலை மறியல் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Conclusion: வாலிபர் கொலை மற்றும் சாலை மறியலால் உத்தமபாளையம் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது
Last Updated : Nov 20, 2019, 6:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.