ETV Bharat / state

மேற்குத்தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ!

author img

By

Published : May 28, 2019, 9:53 AM IST

தேனி: மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டியுள்ள அகமலை அருகே ஏற்பட்ட காட்டுத்தீயை வனத் துறையினர் நீண்ட நேரமாக அணைக்கப் போராடி வருகின்றனர். இந்த காட்டுத்தீயில் பல அரியவகை மரங்கள், மூலிகைச்செடிகள் எரிந்து நாசமாகின.

forest-fire

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அரியவகை மரங்கள், மூலிகைச்செடிகள் பல ஏக்கர் பரப்பளவில் உள்ளன. கோடை தொடங்குவதற்கு முன்பே வனப்பகுதிகளில் அவ்வப்போது காட்டுத் தீ ஏற்படுவதால், காடுகளின் வளங்கள் அழிவதோடு, அங்கு வாழ்கின்ற உயிரினங்களின் வாழ்விடமும் பாதிக்கப்பட்டு அவைகள் வேறு இடத்திற்கு இடம்பெயரும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும், காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத் துறையினர் முயற்சிகள் பல மேற்கொண்டாலும், அவை தோல்வியிலேயே முடிகின்றன.

இந்த நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டியுள்ள அகமலை அருகே உள்ள சின்னுார், பெரியூர் ஆகிய வனப்பகுதிகளில் நேற்று (மே 27) காட்டுத்தீ ஏற்பட்டுள்ளத. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள அரியவகை மரங்கள், மூலிகைச்செடிகள் எரிந்து நாசமகி வருகின்றன.

மேற்குத்தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ

மேலும், வன விலங்குகளும் தங்களின் வாழ்விடத்தை மாற்றி வேறுஇடத்திற்கு இடம் பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க நீண்ட நேரமாக வனத் துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், வனத்துறை காட்டுத்தீ விஷயத்தில் அக்கறை செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அரியவகை மரங்கள், மூலிகைச்செடிகள் பல ஏக்கர் பரப்பளவில் உள்ளன. கோடை தொடங்குவதற்கு முன்பே வனப்பகுதிகளில் அவ்வப்போது காட்டுத் தீ ஏற்படுவதால், காடுகளின் வளங்கள் அழிவதோடு, அங்கு வாழ்கின்ற உயிரினங்களின் வாழ்விடமும் பாதிக்கப்பட்டு அவைகள் வேறு இடத்திற்கு இடம்பெயரும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும், காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத் துறையினர் முயற்சிகள் பல மேற்கொண்டாலும், அவை தோல்வியிலேயே முடிகின்றன.

இந்த நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டியுள்ள அகமலை அருகே உள்ள சின்னுார், பெரியூர் ஆகிய வனப்பகுதிகளில் நேற்று (மே 27) காட்டுத்தீ ஏற்பட்டுள்ளத. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள அரியவகை மரங்கள், மூலிகைச்செடிகள் எரிந்து நாசமகி வருகின்றன.

மேற்குத்தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ

மேலும், வன விலங்குகளும் தங்களின் வாழ்விடத்தை மாற்றி வேறுஇடத்திற்கு இடம் பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க நீண்ட நேரமாக வனத் துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், வனத்துறை காட்டுத்தீ விஷயத்தில் அக்கறை செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.