ETV Bharat / state

வைகை அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!

author img

By

Published : Nov 7, 2022, 1:00 PM IST

தேனி அருகே உள்ள வைகை அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேனி வைகை அணையின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி வைகை அணையின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி: கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.

வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்து. அதன் முழு கொள்ளளவான 71 அடியில் 70.01 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் வெளியேற்றபட்டது. வைகை அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 2,530 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

மேலும் அணையிலிருந்து வெளியேறும் நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் வைகை ஆற்றைக் கடக்கவோ, அதன் அருகில் சென்று செல்பி எடுக்கவோ வேண்டாம் எனவும், ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மழை காலத்திலும் வறண்டு கிடக்கும் 433 ஏரிகள் - பொதுப்பணித்துறை தகவல்

தேனி: கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.

வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்து. அதன் முழு கொள்ளளவான 71 அடியில் 70.01 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் வெளியேற்றபட்டது. வைகை அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 2,530 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

மேலும் அணையிலிருந்து வெளியேறும் நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் வைகை ஆற்றைக் கடக்கவோ, அதன் அருகில் சென்று செல்பி எடுக்கவோ வேண்டாம் எனவும், ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மழை காலத்திலும் வறண்டு கிடக்கும் 433 ஏரிகள் - பொதுப்பணித்துறை தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.