ETV Bharat / state

Theni: கூடலூர் வனப்பகுதியில் கொட்டும் மழையில் விவசாயிகள் 3வது நாளாகப் போராட்டம்!

வனப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தங்களுக்கு சாதகமாக உத்தரவு வந்துள்ளதாகவும், நிலத்தை ஒப்படைக்கக்கோரியும் சுமார் மூன்று நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கூடலூர் வனப்பகுதி
cudaloor forest area
author img

By

Published : Jul 5, 2023, 5:40 PM IST

விவசாயிகள் போராட்டம்

தேனி: தேனி மாவட்டத்தின் தமிழக எல்லை, கூடலூர் மேற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட தமிழக வனப்பகுதியான சுரங்கனாறு, காப்புக்காடு, ஆசாரிபள்ளம் பகுதியில் கூடலூர் பகுதியைச் சேர்ந்த சிலர் தலைமுறை தலைமுறையாக தங்கி, ஏலக்காய், மிளகு உள்ளிட்ட விவசாயம் செய்து வந்துள்ளனர்.

கடந்த 1993ல் வனப்பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது இங்கு விவசாயம் செய்த ஏராளமான விவசாயிகள் வனப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வனப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். மேலும், வன உரிமையை அங்கீகரித்தல் 2006 சட்டத்தின்கீழ், பாரம்பரியவாசிகள் சுய சாகுபடி செய்ய வன நிலத்தை வைத்திருக்க உரிமைகோரி, வனத்துறையினருக்கு மனு கொடுத்தனர்.

இதற்குப் பதிலளித்த வன அதிகாரி சமர்தா பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய வனவாசிகள் சட்டம் 2006ன் படி விண்ணப்பம் பரிசீலனைக்காக கிராமசபைக் கூட்டம் கூட்டி அல்லது வனக்குழு ஏற்பாடு செய்து அதன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்றனர்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் ஆளும் கட்சியைப் பொறுத்து மேகதாது விவகாரம் பார்க்கப்படுகிறது - தெலங்கானா ஆளுநர் தமிழிசை சாடல்

இந்நிலையில், இந்த வழக்கில் 18 குடும்பங்களுக்குச் சாதகமாக உத்தரவு வந்துள்ளதாகவும் தங்கள் நிலத்தை ஒப்படைக்கக் கோரி, பெண்கள் உட்பட சுமார் 18 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வனப்பகுதிக்குள் சென்று டென்ட் அமைத்து குடியேறி உணவு சமைத்துக் கொண்டு, தங்கள் நிலத்தை ஒப்படைக்கக்கோரி போராட்டம் நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் மூன்று நாட்களாக அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை பயனளிக்கவில்லை. இதனால் கொட்டும் மழையிலும் விவசாயிகள் நேற்று மூன்றாவது நாளாகப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்நிலையில் நான்காவது நாளான இன்று காலை உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி மற்றும் தேனி மாவட்ட வனத்துறையைச் சார்ந்த உயர் வன அலுவலர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்பு விவசாயிகளிடம் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தையானது சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. விவசாயிகளோ தங்களுக்கு உள்ளே விவசாயம் செய்வதற்கு நீதிமன்ற ஆணை உள்ளதாகக் கூறி, வெளியேற மறுத்தனர்.

பின்னர் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சட்ட ரீதியாக இதற்குத் தீர்வு காண்பதற்கான வழிவகை மேற்கொள்ளப்படும் என எடுத்துக் கூறி அவர்களை வனப்பகுதியிலிருந்து வனத்துறை வாகனத்தின் மூலமாக கூடலூரில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும், அவர்களிடம் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் தற்போது தீவிரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: Dindigul-ல் இப்படி ஒரு திருவிழா - மாடு மாலை தாண்டும் பாரம்பரிய நிகழ்ச்சி; மாஸாக நடனமாடிய மக்கள்

விவசாயிகள் போராட்டம்

தேனி: தேனி மாவட்டத்தின் தமிழக எல்லை, கூடலூர் மேற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட தமிழக வனப்பகுதியான சுரங்கனாறு, காப்புக்காடு, ஆசாரிபள்ளம் பகுதியில் கூடலூர் பகுதியைச் சேர்ந்த சிலர் தலைமுறை தலைமுறையாக தங்கி, ஏலக்காய், மிளகு உள்ளிட்ட விவசாயம் செய்து வந்துள்ளனர்.

கடந்த 1993ல் வனப்பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது இங்கு விவசாயம் செய்த ஏராளமான விவசாயிகள் வனப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வனப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். மேலும், வன உரிமையை அங்கீகரித்தல் 2006 சட்டத்தின்கீழ், பாரம்பரியவாசிகள் சுய சாகுபடி செய்ய வன நிலத்தை வைத்திருக்க உரிமைகோரி, வனத்துறையினருக்கு மனு கொடுத்தனர்.

இதற்குப் பதிலளித்த வன அதிகாரி சமர்தா பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய வனவாசிகள் சட்டம் 2006ன் படி விண்ணப்பம் பரிசீலனைக்காக கிராமசபைக் கூட்டம் கூட்டி அல்லது வனக்குழு ஏற்பாடு செய்து அதன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்றனர்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் ஆளும் கட்சியைப் பொறுத்து மேகதாது விவகாரம் பார்க்கப்படுகிறது - தெலங்கானா ஆளுநர் தமிழிசை சாடல்

இந்நிலையில், இந்த வழக்கில் 18 குடும்பங்களுக்குச் சாதகமாக உத்தரவு வந்துள்ளதாகவும் தங்கள் நிலத்தை ஒப்படைக்கக் கோரி, பெண்கள் உட்பட சுமார் 18 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வனப்பகுதிக்குள் சென்று டென்ட் அமைத்து குடியேறி உணவு சமைத்துக் கொண்டு, தங்கள் நிலத்தை ஒப்படைக்கக்கோரி போராட்டம் நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் மூன்று நாட்களாக அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை பயனளிக்கவில்லை. இதனால் கொட்டும் மழையிலும் விவசாயிகள் நேற்று மூன்றாவது நாளாகப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்நிலையில் நான்காவது நாளான இன்று காலை உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி மற்றும் தேனி மாவட்ட வனத்துறையைச் சார்ந்த உயர் வன அலுவலர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்பு விவசாயிகளிடம் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தையானது சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. விவசாயிகளோ தங்களுக்கு உள்ளே விவசாயம் செய்வதற்கு நீதிமன்ற ஆணை உள்ளதாகக் கூறி, வெளியேற மறுத்தனர்.

பின்னர் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சட்ட ரீதியாக இதற்குத் தீர்வு காண்பதற்கான வழிவகை மேற்கொள்ளப்படும் என எடுத்துக் கூறி அவர்களை வனப்பகுதியிலிருந்து வனத்துறை வாகனத்தின் மூலமாக கூடலூரில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும், அவர்களிடம் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் தற்போது தீவிரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: Dindigul-ல் இப்படி ஒரு திருவிழா - மாடு மாலை தாண்டும் பாரம்பரிய நிகழ்ச்சி; மாஸாக நடனமாடிய மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.