ETV Bharat / state

பருவமழை வேண்டி பக்தர்கள் ஊர்வலம்! - rain pooja

தேனி: பருவமழை வேண்டி பால்குடம்,  கஞ்சி கலயம் சுமந்து ஓம்சக்தி பக்தர்கள் ஊர்வலம் சென்றுள்ளனர்.

பருவமழை வேண்டி பக்தர்கள் ஊர்வலம்
author img

By

Published : Aug 16, 2019, 7:15 PM IST

விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாகக் கொண்ட தேனி மாவட்டத்தில் சமீப காலமாகவே பருவமழை கிடைக்காததால் வயல்வெளிகள் வறண்டு பாலைவனமாக மாறத்தொடங்கி விவசாயிகளுக்கு பல்வேறு வகையான சிரமங்கள் ஏற்பட்டன.

பருவமழை வேண்டி பக்தர்கள் ஊர்வலம்

இந்நிலையில், உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் ஓம் சக்தி வாரவழிபாட்டு மன்றம் சார்பில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், கஞ்சி கலயம் சுமந்து வழிபட்டனர்.

ஆடி மாதத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமைகளில் இது போன்று அம்மனுக்கு வழிபாடு நடத்துவதன் மூலம் பருவத்திற்கு மழை பெய்து செழிப்படையும் என்ற நம்பிக்கை இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாகக் கொண்ட தேனி மாவட்டத்தில் சமீப காலமாகவே பருவமழை கிடைக்காததால் வயல்வெளிகள் வறண்டு பாலைவனமாக மாறத்தொடங்கி விவசாயிகளுக்கு பல்வேறு வகையான சிரமங்கள் ஏற்பட்டன.

பருவமழை வேண்டி பக்தர்கள் ஊர்வலம்

இந்நிலையில், உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் ஓம் சக்தி வாரவழிபாட்டு மன்றம் சார்பில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், கஞ்சி கலயம் சுமந்து வழிபட்டனர்.

ஆடி மாதத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமைகளில் இது போன்று அம்மனுக்கு வழிபாடு நடத்துவதன் மூலம் பருவத்திற்கு மழை பெய்து செழிப்படையும் என்ற நம்பிக்கை இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Intro: பருவம் தவறாறு மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் கம்பம் பள்ளதாக்கு பகுதியில் சிறப்பு பூஜை. கஞ்சி கலயம், பால்குடம் மற்றும் அம்மனை சுமந்து ராயப்பன்பட்டியில் பக்தர்கள் ஊர்வலம்.
Body: தேனி மாவட்டம் ஓர் விவசாயம் சார்ந்த மாவட்டமாகும். இப்பகுதியில் நெல், தென்னை, வாழை, திராட்சை உள்ளிட்ட சாகுபடி நடைபெற்று வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரியாக கிடைக்காத காரணத்தினால் உழவுப்பணிகள் முடங்கி விவசாயிகளுக்கு பல்வேறு வகை சிரமங்கள் ஏற்பட்டன. மேலும் தண்ணீர்; இல்லாத காரணத்தால் நிலங்கள வறண்டு பாவைனமாக மாறத்தொடங்கின. இந்நிலையில் இந்த ஆண்டாவது தவறாது பருவமழை பெய்து விவசாயம் செழித்திட வேண்டி ஆடி மாத கடைசி வெள்ளியான இன்று பக்தர்கள் இன்று கஞ்சி கலயம், பால்குடம் மற்றும் அம்மன் ஊர்வலம் செய்து வழிபாடு நடத்தினர்.
கம்பம் பள்ளதாக்கு பகுதியான உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் ஓம் சக்தி வாரவழிபாட்டு மன்றம் சார்பில் இந்த சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையான இன்று ஓம்சக்தி பக்தர்கள் அம்மனை நினைத்து 30 நாட்கள் விரதம் மேற்கொண்டு சிவப்பு நிற ஆடை அணிந்து அம்மன் வழிபாட்டு தலத்தில் இருந்து கஞ்சி கலையம், பால்குடம் மற்றும் பல்லக்கில் அம்மனை சுமந்து ராயப்பன்பட்டி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் அம்மன் பிரசாதமாக கஞ்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் மற்றும் கஞ்சி கலயம் சுமந்து வழிபட்டனர்.
Conclusion: ஆடி மாதத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமைகளில் இது போன்று அம்மனுக்கு வழிபாடு நடத்துவதன் மூலம் பருவத்திற்கு மழை பெய்து செழிப்படையும் என்ற நம்பிக்கை இருப்பதாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.