தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி பகுதியிலுள்ள காட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு, அப்பகுதியைச் சேர்ந்த ஆதீஸ்வரன் என்ற இளைஞர் கஞ்சா விற்பனை செய்திருப்பதைக் கண்டனர்.
பின்னர், காவல் துறையினர் அவரை மடக்கிப் பிடித்து அவரிடமிருந்த இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ஆதீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஊரடங்கு உத்தரவால் மது பிரியர்களுக்கு மது கிடைக்காத நிலையில் பெரியகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடக்கின்றதா என காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் விற்ற இருவர் கைது!