ETV Bharat / state

சாலை வசதி அமைத்து தர வேண்டும்: தோடர் இன மக்கள் கோரிக்கை

author img

By

Published : Jul 18, 2022, 8:05 PM IST

நீலகிரியில் சாலை வசதி அமைத்து தர வேண்டும் என தோடர் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தோடர்
தோடர்

நீலகிரி: இந்தியா முழுவதும் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்டத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது. அத்தகைய தொகையை கொண்டு பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குடிநீர் இணைப்பு, சாலை வசதி, சமுதாயக்கூடம் என பழங்குடி கிராமங்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்படுகிறது.

பஞ்சாயத்து நிர்வாகத்தின் தலைமையில் அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கக்கூச்சி ஊராட்சிக்குட்பட்ட பெட்டுமந்து பகுதியில் தோடர்இன மக்கள் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் நடைபாதை மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது.

சாலை வசதி அமைத்து தர வேண்டும்
சாலை வசதி அமைத்து தர வேண்டும்

தற்போது நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல முடியவில்லை. அரசு ஆம்புலன்ஸ்களும் இப்பகுதிக்கு வர முடியவில்லை. பள்ளி மாணவர்களும் அலுவலகம் செல்வோரும் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது.

சாலை வசதி அமைத்து தர வேண்டும்

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கும் மேற்கொள்ளப்படவில்லை என வேதனையுடன் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தோடர் இன மக்களுக்கு சாலை அமைத்து சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பாலம் உடைந்து ஆற்றில் விழுந்தவரை போராடி காப்பாற்றிய பொதுமக்கள்

நீலகிரி: இந்தியா முழுவதும் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்டத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது. அத்தகைய தொகையை கொண்டு பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குடிநீர் இணைப்பு, சாலை வசதி, சமுதாயக்கூடம் என பழங்குடி கிராமங்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்படுகிறது.

பஞ்சாயத்து நிர்வாகத்தின் தலைமையில் அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கக்கூச்சி ஊராட்சிக்குட்பட்ட பெட்டுமந்து பகுதியில் தோடர்இன மக்கள் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் நடைபாதை மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது.

சாலை வசதி அமைத்து தர வேண்டும்
சாலை வசதி அமைத்து தர வேண்டும்

தற்போது நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல முடியவில்லை. அரசு ஆம்புலன்ஸ்களும் இப்பகுதிக்கு வர முடியவில்லை. பள்ளி மாணவர்களும் அலுவலகம் செல்வோரும் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது.

சாலை வசதி அமைத்து தர வேண்டும்

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கும் மேற்கொள்ளப்படவில்லை என வேதனையுடன் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தோடர் இன மக்களுக்கு சாலை அமைத்து சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பாலம் உடைந்து ஆற்றில் விழுந்தவரை போராடி காப்பாற்றிய பொதுமக்கள்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.