ETV Bharat / state

பழங்குடியின மாணவர்களுக்கு கேள்விக்குறியாகும் ஆன்லைன் வகுப்புகள்?

author img

By

Published : Jul 31, 2020, 9:27 AM IST

நீலகிரி: குன்னூர் சுற்றுவட்டார கிராமங்களில் போதிய இணைய வசதி இல்லாததால் அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெற முடியாத சூழல் நிலவுகிறது.

நீலகிரி மாவட்டச் செய்திகள்  நீலகிரி செய்திகள்  ஆன்லைன் வகுப்பு தடை  பழங்குடியின மாணவி ஆன்லைன் வகுப்பு  online class
பழங்குடியின மாணவர்களுக்கு கேள்விக்குறியாகும் ஆன்லைன் வகுப்புகள்?

கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இருந்தபோதிலும் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த ஆன்லைன் வகுப்புகளுக்காக தாலிச் சங்கிலியை அடகுவைத்தும், வாழ்வாதாரத்திற்கு அடித்தளமாக இருந்த கால்நடைகளை விற்றும் தங்கள் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன், டிவி உள்ளிட்டவற்றை வாங்கிய பெற்றோர் குறித்த செய்திகளை நம்மால் அறிய முடிகிறது. தங்கள் பிள்ளைகளின் கல்வி தடைபட்டுவிடக் கூடாது என்ற காரணத்தினால் இதுபோன்ற செயல்களை மாணவர்களின் பெற்றோர் செய்துள்ளனர்.

கேள்விக்குறியாகும் பழங்குடியின மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகள்

இந்தச் சூழ்நிலையில் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மாணவர்கள், ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெற முடியாத சூழல் நிலவுகிறது. ஏனென்றால், நீலகிரி மாவட்டம் குன்னூர், அதன் சுற்றுப்புற பகுதிகளான குரும்பாடி, கோழிக்கரை, புதுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் டவர்கள் கிடையாது. அப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் வீடுகளில் டிவியும் கிடையாது.

"தற்போது ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. எங்களிடம் ஸ்மார்ட் போன் கிடையாது, டிவி கிடையாது. ஆகையால் ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெற முடியவில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு உதவி செய்யவேண்டும்" என பழங்குடியின மாணவி சந்தியா தெரிவித்தார்.

சந்தியா போன்ற எண்ணெற்ற மாணவ, மாணவிகள் இந்த நாட்டில் உள்ளனர். அரசு இவர்களையும் கணக்கில் எடுத்து தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம்.

இதையும் படிங்க: ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உத்தரவு

கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இருந்தபோதிலும் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த ஆன்லைன் வகுப்புகளுக்காக தாலிச் சங்கிலியை அடகுவைத்தும், வாழ்வாதாரத்திற்கு அடித்தளமாக இருந்த கால்நடைகளை விற்றும் தங்கள் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன், டிவி உள்ளிட்டவற்றை வாங்கிய பெற்றோர் குறித்த செய்திகளை நம்மால் அறிய முடிகிறது. தங்கள் பிள்ளைகளின் கல்வி தடைபட்டுவிடக் கூடாது என்ற காரணத்தினால் இதுபோன்ற செயல்களை மாணவர்களின் பெற்றோர் செய்துள்ளனர்.

கேள்விக்குறியாகும் பழங்குடியின மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகள்

இந்தச் சூழ்நிலையில் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மாணவர்கள், ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெற முடியாத சூழல் நிலவுகிறது. ஏனென்றால், நீலகிரி மாவட்டம் குன்னூர், அதன் சுற்றுப்புற பகுதிகளான குரும்பாடி, கோழிக்கரை, புதுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் டவர்கள் கிடையாது. அப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் வீடுகளில் டிவியும் கிடையாது.

"தற்போது ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. எங்களிடம் ஸ்மார்ட் போன் கிடையாது, டிவி கிடையாது. ஆகையால் ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெற முடியவில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு உதவி செய்யவேண்டும்" என பழங்குடியின மாணவி சந்தியா தெரிவித்தார்.

சந்தியா போன்ற எண்ணெற்ற மாணவ, மாணவிகள் இந்த நாட்டில் உள்ளனர். அரசு இவர்களையும் கணக்கில் எடுத்து தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம்.

இதையும் படிங்க: ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.