ETV Bharat / state

"கலப்பட தேயிலை தூள் குறித்து தகவல் தெரிவித்தால் சிறப்பு பரிசு"

author img

By

Published : Jun 27, 2019, 4:19 PM IST

நீலகிரி:  கலப்பட தேயிலை தூள் குறித்து தகவல் கொடுத்தால் சிறப்பு பரிசு வழங்கப்படும் என தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.

கலப்பட தேயிலை தூள் குறித்து தகவல் தெரிவித்தால் சிறப்பு பரிசு

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தென்னிந்திய தேயிலை வாரிய இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது,

சமீபகாலமாக கலப்பட தேயிலை தூள் பயன்பாடு சில இடங்களில் அதிகரித்து வருவதாக புகார் வருகின்றன. குறிப்பாக, சுற்றுலா மைய பகுதிகளில் தேயிலை தூளின் புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த கலப்படத் தேயிலைத் தூளை உபயோகிப்பதால் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமின்றி, பல்வேறு வியாதிகளும் உண்டாகிறது. இதுகுறித்து, தேயிலை வாரிய அலுவலர்கள், உணவு, பாதுகாப்புத் துறையின் உதவியுடன் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கலப்பட தேயிலை தூள் குறித்து தகவல் தெரிவித்தால் சிறப்பு பரிசு

இந்நிலையில் தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் " கலப்பட தேயிலை தூள் பயன்படுத்தி இருப்பது குறித்து தேயிலை வாரியத்திற்கு தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்" என அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தென்னிந்திய தேயிலை வாரிய இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது,

சமீபகாலமாக கலப்பட தேயிலை தூள் பயன்பாடு சில இடங்களில் அதிகரித்து வருவதாக புகார் வருகின்றன. குறிப்பாக, சுற்றுலா மைய பகுதிகளில் தேயிலை தூளின் புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த கலப்படத் தேயிலைத் தூளை உபயோகிப்பதால் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமின்றி, பல்வேறு வியாதிகளும் உண்டாகிறது. இதுகுறித்து, தேயிலை வாரிய அலுவலர்கள், உணவு, பாதுகாப்புத் துறையின் உதவியுடன் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கலப்பட தேயிலை தூள் குறித்து தகவல் தெரிவித்தால் சிறப்பு பரிசு

இந்நிலையில் தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் " கலப்பட தேயிலை தூள் பயன்படுத்தி இருப்பது குறித்து தேயிலை வாரியத்திற்கு தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்" என அறிவித்துள்ளது.

Intro:நீலகிரி மாவட்ட தேயிலை வாரியம் கலப்பட தேயிலை தூள் குறித்து தகவல் கொடுத்தால் சிறப்பு பரிசு புதிய அறிவிப்பு


Body:நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தென்னிந்திய தேயிலை வாரிய இயக்குனர் அறிக்கையில் கூறியிருப்பது சமீபகாலமாக நீலகிரி மாவட்டத்தில் கலப்பட தேயிலை தூள் மற்றும் பயன்பாடு சில இடங்களில் அதிகரித்து வருவதாக புகார் வருகின்றன குறிப்பாக சுற்றுலா மையமான நீலகிரி மாவட்டம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களின் கலப்பட தேயிலை தூளின் புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது கலப்படத் தேயிலைத் தூளை உபயோகிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமின்றி பல்வேறு வியாதிகளும் உண்டாகிறது இதுகுறித்து தேயிலை வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கலப்பட தேயிலை தூளை மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு மற்றும் பாதுகாப்புத் துறையின் உதவியுடன் தடுத்து வருகின்றது மக்கள் நலன் கருதி இந்த கலப்பட தேயிலை தூளின் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்க தேயிலை வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது எனவே பொதுமக்கள் தங்கள் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சில்லறைக் கடைகள் உணவு விடுதிகள் டீக் கடைகள் பேக்கரிகள் தேயிலை தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் கலப்பட தேயிலை தூள் பயன்படுத்தி இருப்பதாக தகவல் தெரிந்தால் இதுகுறித்து உடனடியாக தேயிலை வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவிப்பு விடுத்துள்ளது


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.